டோல்கேட் கட்டணம் ரத்து டிச.2 நள்ளிரவு வரை நீட்டிப்பு - லாரி ஸ்டிரைக் அறிவிப்பு எதிரொலி
லாரி உரிமையாளர்களின் போராட்ட அறிவிப்பை அடுத்து தேசிய நெடுஞ்சாலைகளில் டிசம்பர் 2-ந் தேதி நள்ளிரவு வரை டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், அனைவரும் 100 ரூபாய் மட்டும் அதிகளவு உபயோகிக்கப்பட்டது. இதனால் 500,1000 ரூபாய்க்கு உபயோகிக்க முடியாமலும், 100 ரூபாய் கிடைக்காததால், சில்லரை பிரச்னை வலுத்தது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சில்லரை தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகளிடம் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதற்கு ஊழியர்கள் மறுத்தனர். இதனால் சுங்கச்சாவடிகளில் மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று 3 முறை மத்திய அரசு காலஅவகாசத்தை நீட்டித்தது.
இதனையடுத்து இன்று நள்ளிரவு வரை விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 4வது முறையாக கால அவகாசம் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சில்லரை தட்டுப்பாடு பிரச்னை சரிவர தீராததால் சுங்கக்கட்டணத்தை டிசம்பர் 31ம் தேதிவரை வசூலிக்கக் கூடாது என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். ரூபாய் நோட்டு பிரச்சனை தீரும் வரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என தென்னிந்திய மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடுமுழுவதும் டிசம்பர் 31ம் தேதி வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், அவ்வாறு அறிவிக்காவிட்டால், நள்ளிரவு முதல் போராட்டம் நடத்தவும் லாரி உரிமையார்கள் சங்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சுங்க கட்டண ரத்து செய்யப்படுவதற்கான கால அவகாசம் டிசம்பர் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சுங்க கட்டண ரத்து செய்யப்படுவதற்கான கால அவகாசம் டிசம்பர் 2-ந் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.