இன்று நள்ளிரவுடன் பழைய ரூ.500 நோட்டு எங்கும் செல்லாது!
டெல்லி: பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் இன்று நள்ளிரவு இரவு 12 மணிக்கு பிறகு செல்லுபடியாகாது. அதேநேரம் வரும் 30ம் தேதிவரை அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம்.
புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்படுவதாக அரசு நவம்பர் 8ம் தேதி அறிவித்தது. இந்நிலையில், அரசு மருத்துவமனை, சமையல் காஸ், டோல்பூத்களில் அவை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டு படிப்படியாக பல்வேறு அரசு சேவைகளில் இருந்தும் அந்த நோட்டுக்கள் நிறுத்தப்பட்டன.

1000 ரூபாய் நோட்டுக்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், 500 ரூபாய் பயன்பாடு இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. தற்போது காஸ் சிலிண்டர், அரசு வரி கட்டுதல், டோல்கேட்களில் அவற்றை பயன்படுத்த முடிகிறது. இன்று நள்ளிரவு முதல் முற்றிலுமாக அந்த நோட்டு செல்லுபடியாகாது.
ஆனால், டிசம்பர் 30ம் தேதிவரை பழைய ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்துகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications