ஆக. 12 முதல் 18 வரை.. தேசிய நினைவுச் சின்னங்கள் முன்பு செல்பி எடுக்கத் தடை!
டெல்லி: சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கையாக தேசிய நினைவுச் சின்னங்கள் முன் நின்று செல்பி எடுக்க ஆகஸ்ட் 12 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் 15ம் தேதி இந்தியாவின் 70வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
பல விமான நிலையங்களில் குறிப்பிட்ட தினங்கள் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது தேசிய நினைவுச் சின்னங்கள் முன் நின்று செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் அனுப்பி உள்ளது.
ஆகஸ்ட் 12 ம் தேதி முதல் ஆகஸ்ட் 18 ம் தேதி வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும். சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உளவுத் துறை தகவல்களின் படி, ஐஎஸ் தீவிரவாதிகள் இம்முறை சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சீரழிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே தான் இந்த கூடுதல் பாதுகாப்பு எனக் கூறப்படுகிறது.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications