For Daily Alerts
Just In
பெரு வணிகர்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் சலுகை!
டெல்லி: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் இன்று காலை முதல் இரவு வரை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும், மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த மாதம் கவுகாத்தியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில், ரூ.3கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை ரிட்டன் தாக்கல் செய்தால் போதுமானது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல ரூ.50000 மதிப்புக்கு மேலான
நகை வாங்குவோருக்கு பான் கார்டிலிருந்து விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Comments
English summary
Any person buying jewellery above Rs 50,000 will not be required to submit PAN or Aadhar Card details, GST Council Meet decides.
Story first published: Friday, October 6, 2017, 19:58 [IST]