செல்போன் டவர்களால் கதிர் வீச்சு அபாயம் இல்லை... டிராய் அறிவிப்பு
டெல்லி : செல்போன் டவர்களிலிருந்து கதிர் வீச்சு அபாயம் எதுவும் இல்லை என்று இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது.
செல்போன் சிக்னல்களை அனுப்புவதில் முக்கியப் பங்கு வகிப்பது செல்போன் டவர்கள். ஒரு செல்போனிலிருந்து மற்றொரு செல்போனைத் தொடர்பு கொண்டு அழைக்கும்போது, அதற்கான சிக்னல் தகவல்கள் செல்போன் டவர்கள் மூலமாகத்தான் பரிமாறப்படுகின்றன. டிராய் அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் எஸ்.கே. குப்தா இது தொடர்பாக பேசியதாவது...

செல்போன் டவர்களிலிருந்து கதிர் வீச்சு வெளிப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. மேலும், இந்தக் கதிர் வீச்சு உடல் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உண்மை நிலையைக் கண்டறிய டிராய் தொழில்நுட்ப குழு ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தது.
ஹிமாசல பிரதேச மாநிலத்தில் டவர்களை ஆய்வு செய்ய டிராய் முடிவு செய்தது. இது தொடர்பாக அந்த மாநிலத்தில் 300 செல்போன் டவர்கள் தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது. செல்போன் டவர்களிலிருந்து எந்த விதமான கதிர் வீச்சும் இல்லை என்பது அந்த ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
செல்போன் டவர்களால் கதிர் வீச்சு ஏற்படுவதில்லை. அந்தக் டவர்களால் பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
நாட்டின் முக்கியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் கூட்டத்தை டிராய் தற்போது நடத்தியுள்ளது. டவர்கள் தொடர்பான ஆய்வு முடிவுகள் அவர்களிடம் அளிக்கப்பட்டது. டவர்களின் எண்ணிக்கைக் குறைவினால்தான் அழைப்பின்போது துண்டிப்புகள் ஏற்படுகின்றன.
நிழல் பகுதிகள் என்று அறியப்படும் செல்போன் சிக்னல்களில் தொய்வு ஏற்படும் பகுதிகளில் கூடுதல் டவர்கள் அமைத்து, அழைப்புத் துண்டிப்பு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications