செல்போன் டவர்களால் கதிர் வீச்சு அபாயம் இல்லை... டிராய் அறிவிப்பு
டெல்லி : செல்போன் டவர்களிலிருந்து கதிர் வீச்சு அபாயம் எதுவும் இல்லை என்று இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது.
செல்போன் சிக்னல்களை அனுப்புவதில் முக்கியப் பங்கு வகிப்பது செல்போன் டவர்கள். ஒரு செல்போனிலிருந்து மற்றொரு செல்போனைத் தொடர்பு கொண்டு அழைக்கும்போது, அதற்கான சிக்னல் தகவல்கள் செல்போன் டவர்கள் மூலமாகத்தான் பரிமாறப்படுகின்றன. டிராய் அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் எஸ்.கே. குப்தா இது தொடர்பாக பேசியதாவது...

செல்போன் டவர்களிலிருந்து கதிர் வீச்சு வெளிப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. மேலும், இந்தக் கதிர் வீச்சு உடல் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உண்மை நிலையைக் கண்டறிய டிராய் தொழில்நுட்ப குழு ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தது.
ஹிமாசல பிரதேச மாநிலத்தில் டவர்களை ஆய்வு செய்ய டிராய் முடிவு செய்தது. இது தொடர்பாக அந்த மாநிலத்தில் 300 செல்போன் டவர்கள் தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது. செல்போன் டவர்களிலிருந்து எந்த விதமான கதிர் வீச்சும் இல்லை என்பது அந்த ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
செல்போன் டவர்களால் கதிர் வீச்சு ஏற்படுவதில்லை. அந்தக் டவர்களால் பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
நாட்டின் முக்கியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் கூட்டத்தை டிராய் தற்போது நடத்தியுள்ளது. டவர்கள் தொடர்பான ஆய்வு முடிவுகள் அவர்களிடம் அளிக்கப்பட்டது. டவர்களின் எண்ணிக்கைக் குறைவினால்தான் அழைப்பின்போது துண்டிப்புகள் ஏற்படுகின்றன.
நிழல் பகுதிகள் என்று அறியப்படும் செல்போன் சிக்னல்களில் தொய்வு ஏற்படும் பகுதிகளில் கூடுதல் டவர்கள் அமைத்து, அழைப்புத் துண்டிப்பு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications