பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கின்போது 5 நாட்கள் விடுமுறை... திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு
பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கின்போது 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்: பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கின்போது 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்வந்துள்ளது.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 6 மாத ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மாதவிலக்கு சமயங்களில் பெண்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மாதவிலக்கு காலங்களின் போது அலுவலகத்துக்கு வரும் பெண்களின் மனம் வழக்கமாக இருப்பதை போல் இருக்காது. மேலும் சிலருக்கு அதிக உதிரப்போக்கு மற்றும் வயிற்றுவலியால் உடல் பலகீனமடைந்திருக்கும்.
இந்த சமயத்தில் பெண்களால் எப்போதும் போல் பணியாற்ற முடியாது என்பதால்தான் பெண்கள் 5 நாட்களுக்கு தனியே ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தனர். தற்போது பெண்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் நிறுவனங்கள் பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஒரு நாள், 3 நாட்கள் என விடுப்பு அளித்து வருகின்றன.
அந்த வகையில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 90 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாதவிலக்கின்போது 5 நாட்ள்கள் விடுமுறை அளித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
அந்த விடுமுறை காலங்களின் போது அவர்களுக்குப் பதிலாக வேறு ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications