"நேருவின் மனைவி" என வாழ்நாள் முழுவதும் ஒதுக்கி வைக்கப்பட்ட பழங்குடி பெண் மரணம்.. யார் இவர்? பின்னணி
ராஞ்சி: இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் மனைவி என்று பழங்குடியின மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் உடல் நலக்குறைவால் காலமானார். அவரை பழங்குடியின மக்கள் நேருவின் மனைவி என சொன்னது ஏன் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினத்தை சேர்ந்தவர் புத்னி மஞ்சியன். கடந்த 1959 ஆம் ஆண்டு புத்னி மஞ்சியன் என்ற அந்த பழங்குடியின பெண்ணுக்கு 16 வயது ஆகியிருந்த போது, அவரது வாழ்க்கையையே திருப்பி போடும் அளவுக்கு ஒரு சம்பவம் நடைபெற்றது. அதாவது, அதே ஆண்டு அணைக்கட்டு திட்டம் ஒன்றை தொடங்கி வைப்பதற்காக இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தன்பத் மாவட்டம் அருகே உள்ள பழங்குடியின பகுதிக்கு சென்றார்.

அப்போது நேரு பழங்குடியின மக்களை கவுரவிக்கும் விதமாக அங்கு நின்று கொண்டு இருந்த புத்னி மஞ்சியனுக்கு மாலை அணிவித்தார். ஆனால், சந்தால் என அழைக்கப்படும் பழங்குடியினத்தை சேர்ந்த அந்த பெண்ணின் சமூகத்தை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்ததால் அதை திருமணாக கருதினர். இதனால், அந்த நிகழ்வுக்கு பிறகு தங்கள் சமூகத்தில் இருந்து அந்த பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டனர்.
மாரடைப்பால் உயிரிழந்தார்: அவர்களின் வசிப்பிடத்திற்கும் செல்வதற்கு புத்னி மஞ்சியனுக்கு பழங்குடியின மக்கள் அனுமதிக்கவில்லை. இதற்கு மத்தியில் அவர் வேலை பார்த்து வந்த தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். அதன்பின்னர் ஜார்க்கண்டிற்கு குடி பெயர்ந்த புத்னி, சுதிர் தத்தா என்பரை மணந்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையே கடந்த 1985-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பகுதிக்கு சென்றார். அந்த சமயத்தில், அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் புத்னி மஞ்சியன் நிலையை எடுத்துக் கூறினர். ராஜிவ் காந்தி ரொம்பவே வருத்தப்பட்டார். இதையடுத்து மீண்டும் தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தில் வேலை வழங்கப்பட்டது. கடந்த 2005 ஆம் ஆண்டு பணியில் இருந்து புத்னி ஓய்வு பெற்றார். தற்போது 80- வயதான புத்னி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். புத்னி உடலுக்கு உள்ளூர் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
நேருவின் சிலை அருகே: அங்குள்ள பூங்காவில் அமைக்கப்பட்டு இருக்கும் நேருவின் சிலை அருகே நினைவிடம் ஒன்றையும் புத்னிக்கு அமைக்கப்பட வேண்டும் எனவும் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் இது குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசிய பிறகே முடிவு எடுக்க முடியும் என தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தின் தலைமை அதிகாரி கூறினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications