வடஇந்தியாவில் உருமாறிய துர்கா பூஜை! மகிஷாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக கடைபிடிப்பு!!

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: வட இந்தியாவில் துர்கா தேவியை முன்வைத்தே நடைபெற்று வந்த நவராத்திரி விழா இந்த ஆண்டு துர்கா தேவியால் கொல்லப்பட்ட மகிஷாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக உருமாறியது.

மகிஷாசுரன் என்ற அரக்கனை தேவர்களால் உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அழித்ததை நவராத்திரி நாள் என்று கொண்டாடி வருகின்றனர். ஆனால் அண்மைக்காலமாக இந்த நிகழ்வு தலைகீழாக உருமாறத் தொடங்கியது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கத்தினர்தான் முதன் முதலாக ஆரியர்களால் வீழ்த்தப்பட்ட மகிஷாசுரனை மாவீரன் என்று போற்றி வீரவணக்க நாளாக கடைபிடித்தனர்.

அதன் பின்னர் இந்த ஆண்டு உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் பல மாவட்டங்களில் துர்கா பூஜையின் இறுதி நாள் மகிஷாசுரன் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் மகிஷாசுரன் தங்களது முன்னோர் என்கின்றனர்.

பீகாரில் மகிஷாசுரன் சிலைகள் வைக்கப்பட்டு அவன் கொல்லப்பட்ட நாள் என்பதால் கறுப்பு உடை அணிந்து துக்க நாளாகவும் கடைபிடித்துள்ளனர். அதாவது துர்கா தேவியை ஏவியது ஆரியர்கள் என்றும் தாங்கள் ஆரியரல்லாதோர் என்பதால் அப்படி ஏவிவிட்டு தங்களது குலத் தலைவர் மகிஷாசுரனை வீழ்த்தினர் என்பதும் அவர்களது கருத்து.

Durga puja

அத்துடன் பெண்களுக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்தாதவர்கள் நாங்கள் என்பதாலேயே பெண் ஒருவரை ஆரியர்கள் அனுப்பி மகிஷாசுரனை கொலை செய்தனர் என்றும் கூறுகின்றனர்.

ஒடிஷா, மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநில பழங்குடிகளில் பலர் திராவிட இனப் பழங்குடிகள் என்றே வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+