திருச்சி-குஜராத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. அலறிய பயணிகள்! அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: திருச்சி - குஜராத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உரிய நேரத்தில் பயணிகள் வெளியேறி விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியில் இருந்து குஜராத்தின் ஸ்ரீகங்கா நகருக்கு ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்களை கடந்து செல்லும் இந்த விரைவு ரயிலில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிக அளவு இருக்கும். இந்த ரயில் சூரத் நகரில் இருந்து 25 கி.மீட்ட தொலைவில் உள்ள வல்சத் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஒரு பெட்டியில் தீ பிடித்தது.

Trichy - Gujarat Express Train Fire Accident

தீ விபத்தை அடுத்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். என் ஜின் மற்றும் அதற்கு பக்கத்திலேயே இருந்த பி 1 கோச்சில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. உடனடியக ரயில் நிறுத்தப்பட்டதும் பயணிகள் அவசர அவசரமாக இறங்கினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், பிற பெட்டிகளுக்கும் தீ பரவாமல் இருக்கும் வகையில் பெட்டிகளை தனியாக கழற்றிவிட்டனர்.

கரும்புகையுடன் தீ பற்றி எரியும் காட்சிகள் வெளியாகி பயணிகளை அதிர்ச்சி அடைய வைக்கும் விதமாக உள்ளது. இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+