கோஷ்டி மோதலில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பலி.. நள்ளிரவில் நடந்த கொடூரம்.. மேற்கு வங்கத்தில் ஷாக்!
கொல்கத்தா: லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஒருவர், மோதலில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் பகுயாட்டி அர்ஜுன்பூர் பகுதியில் நேற்று இரவு இரு பிரிவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒரு குழுவினர் மற்றொரு பகுதியின் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தகவல் அறிந்து அங்கு போலீசார் வந்துள்ளனர். பின்னர் போலீசார் அங்கிருந்து சென்றதும் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது செங்கல் மற்றும் கட்டைகளால் இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதல் படுகாயம் அடைந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் சஞ்சீவ் தாஸ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலில் பலியான சஞ்சீவ் தாஸின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், இது திட்டமிடப்பட்ட கொலை எனக் கூறி, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஆனந்தபூர் பகுதியில் பாஜக பெண் நிர்வாகியான சரஸ்வதி சர்க்கார் என்பவர் நேற்று இரவு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்டார். தாக்குதலில் தலையில் காயமடைந்த சரஸ்வதி சர்க்கார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications