திரிபுராவில் 6,518 வாக்குகளில் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்த இடதுசாரிகள்
திரிபுராவில் 6,518 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்தது சிபிஎம்.
அகர்தலா: திரிபுராவில் 0.3% வாக்கு வித்தியாசத்தில் அதாவது வெறும் 6518 வாக்குகளில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்திருக்கின்றனர் இடதுசாரிகள்.
திரிபுராவில் 25 ஆண்டுகாலம் இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வந்தது. பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தது. பாஜகவுக்கு அமைப்பு பலம் கூட இல்லாத நிலைதான் 5 ஆண்டுகளுக்கு முன்னர்.
கடந்த 4 ஆண்டுகாலமாக பாஜக, திரிபுராவில் வேர்பிடித்துவிட்டது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் என அப்படியே வளைத்து போட்டு பாஜகவாக உருவெடுத்தது.

பழங்குடிகள் ஓட்டுகள்
அத்துடன் தேர்தலில் தனிநாடு கோருகிற பூர்வகுடிகள் கட்சியுடன் கூட்டணியும் வைத்துக் கொண்டது. இதனால் பழங்குடி மக்களின் வாக்குகளும் காங்கிரஸின் வாக்கு வங்கியும் பாஜகவுக்கு மடை மாறின.

இடதுசாரிகள் சரித்திரத்துக்ககுசெக்
இதனால் பாஜக, திரிபுராவில் இடதுசாரிகளின் சரித்திரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. நிச்சயம் பாஜக விஸ்வரூபமெடுத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

9,99,093 வாக்குகள்
அதேநேரத்தில் வாக்கு சதவீத வித்தியாசம் என்று பார்த்தால் பாஜக 43.0% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது மொத்தம் 9,99,093 வாக்குகளை தனித்து பெற்றிருக்கிறது பாஜக.

6,518 வாக்குகள் வித்தியாசம்
இடதுசாரிகள் வாக்கு வங்கியும் பெரிய சரிவை எதிர்கொள்ளவில்லை. இடதுசாரிகள் 42.7% வாக்குகள் பெற்றுள்ளனர். மொத்தம் 9,92,57 வாக்குகள் இடதுசாரிகளுக்கு கிடைத்தும் இடங்கள் போதுமானதாக இல்லை. பாஜகவுக்கும் இடதுசாரிகளுக்குமான வாக்கு வித்தியாசம் என்பது வெறும் 6,518 வாக்குகள் மட்டுமே.

பின்னடைவை சந்தித்த இடதுகள்
இருப்பினும் அமைப்பே இல்லாத பாஜக இப்படி ஒரு விஸ்வரூபத்தைக் கொடுக்கும் என்பதை இடதுசாரிகள் எதிர்பார்க்கவில்லை. அதனால் இடதுசாரிகளுக்கு இது பின்னடைவுதான்.












Click it and Unblock the Notifications