திரிபுராவில் சிபிஎம் அலுவலகங்கள், பிரமுகர்கள் மீது தொடரும் பாஜக 'அட்டாக்'
சிபிஎம் அலுவலகங்கள், பிரமுகர்கள் மீது தொடரும் பாஜக 'அட்டாக்'
Subscribe to Oneindia Tamil
அகர்தலா: திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள், பிரமுகர்களை குறிவைத்து பாஜக- ஆர்.எஸ்.எஸ். கும்பல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக வென்று ஆட்சியை கைப்பற்றியது. 25 ஆண்டுகாலம் நீடித்த இடதுசாரிகள் ஆட்சி முடிவுக்கு வந்தது.

தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினர் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள், பிரமுகர்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் சில இடங்களில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

கடந்த 4-ந் தேதி முதல் இன்று வரை இத்தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜக-ஆர்.எஸ்.எஸ். கும்பலின் தாக்குதலின் படுகாயமடைந்த மார்க்சிஸ்ட் பிரமுகர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications