பண மெத்தையில் படுத்துப் புரண்ட சிபிஎம் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்

Subscribe to Oneindia Tamil

Tripura CPM leader, seen lying on 'a bed of cash', expelled from party
அகர்தலா: படுக்கை முழுவதும் பணத்தைப் போட்டு அதில் படுத்துப் புரண்டு பரபரபை ஏற்படுத்திய திரிபுராவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கட்சியை விட்டு தூக்கப்பட்டு விட்டார்.

அந்தத் தலைவரின் பெயர் சமர் ஆச்சார்ஜி. இவர் அகர்தலாவின் ஜோகேந்தர் நகர் கமிட்டி உறுப்பினராக இருந்தவர். இவருக்கு ஒரு சின்னச் சின்ன ஆசை.. அதாவது படுக்கையில் பணத்தாள்களைப் போட்டு அதன் மேல் தூங்க வேண்டும் என்று.

இதையடுத்து தனது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்த அவர் அதை படுக்கையில் போட்டு புரண்டு புரண்டு சந்தோஷப்பட்டார்.

இதை வீடியோவிலும் பதிவு செய்திருந்தார். ஆனால் இது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. அந்த வீடியோவில், நான் ரூ. 20 லட்சம் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுத்தேன். எனது ஆசைப்படி இப்போது படுக்கையில் பணத்தைப் போட்டு அதில் படுத்து சந்தோஷப்படுகிறேன் என்று கூறியிருந்தார் சமர்.

மேலும் அவர் கூறுகையில், மற்ற தலைவர்களைப் போல நான் பொய் சொல்ல விரும்பவில்லை. என்னிடம் பணம் உள்ளதையும் மறைக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

இது பரபரப்பைக் கூட்டியது. இன்த விவகாரம் குறித்து சிபிஎம் கட்சி விசாரணை நடத்தியது. விசாரணையின் இறுதியில், தற்போது சமரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.

இதுகுறித்து மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் பிஜன் தார் கூறுகையில், இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. இது கட்சியின் கொள்கைக்கு விரோதமானது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+