ரூ20 லட்சம் பண மெத்தையில் படுத்து புரண்ட சி.பி.எம். தலைவர்... டி.வி. காட்சியால் பரபரப்பு
அகர்தலா: திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஒருவர் பணமெத்தையில் படுத்து புரளும் காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் எளிமையாக காட்சி அளிப்பார்கள். இதற்கு எதிராக திரிபுரா மாநிலத்தில் சமர் ஆச்சார்ஜி என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பண மெத்தையில் படுத்திருப்பது போன்று வெளியான தொலைக்காட்சி காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அகர்தலா மாநகராட்சியின் 3 வார்டுகளில் கழிவறை அமைக்கும் பணி ஒப்பந்தம் எடுத்திருந்த அவர் அதன் மூலம் ரூ.2½ கோடிக்கு மேல் லாபம் அடைந்தார். இந்த தகவலை அந்த டி.வி. நிகழ்ச்சியில் அவரே தெரிவித்தார்.
மேலும் பண மெத்தையில் படுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு அதை நிறைவேற்றுவதற்காக வங்கியில் இருந்து ரூ.20 லட்சத்தை எடுத்து மெத்தையாக மாற்றியதாக தெரிவித்தார். அத்துடன் சில கம்யூனிஸ்ட் தோழர்கள் நிறைய சொத்து இருந்தாலும் இல்லாதவர்கள் போல் பாசாங்கு செய்வார்கள். நான் அப்படி அல்ல என்றும் அவர் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications