திரிபுராவில் இடதுசாரிகள் ஆதிக்கம் தொடருமா? மேகாலயா, நாகாலாந்தில் யார் ஆட்சி? நாளை ரிசல்ட்
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன.
ஷில்லாங்/அகர்தலா/கோஹிமா: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களின் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
திரிபுராவில் 25 ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. மேகாலயாவில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது.

நாகாலாந்தில் மாநில கட்சிகளுடன் பாஜக ஆட்சியில் இருந்தது. தேர்தலில் இந்த கூட்டணி முறிந்தது. இம்மாநிலங்களில் உள்ள தலா 60 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 18 மற்றும் பிப்ரவரி 27-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. திரிபுராவில் இடதுசாரிகள் படுதோல்வியைத் தழுவக் கூடும் என ஒரு சில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன. இருப்பினும் சிவோட்டர் கருத்து கணிப்பில் இடதுசாரிகள் சகாப்தம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும் ஆளும் காங்கிரஸுக்கு 2-வது இடம் கிடைக்கும் எனவும் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்தன. நாகாலாந்தில் என்டிபிபி-பாஜக கூட்டணிக்கும் என்பிஎப்-க்கும் இடையே கடும் போட்டி நிலவும் எனவும் கருத்து கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications