தொடரும் குழந்தைகள் கடத்தல் - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிசிடிவிகள் பொருத்தம்
திருப்பதி தேவஸ்தான கோயிலில் குழந்தைகள் கடத்தல் அதிகளவில் நடைபெறுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பதி: குழந்தைகள் கடத்தல் அதிகளவில் நடைபெற்று வருவதை தொடர்ந்து சிசிடிவி காமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் திருமலை ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதியில் சாமி கும்பிட வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குழந்தைகள் கடத்தலை தடுக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுமார் நான்கரை கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 400 அதி நவீன சிசிடிவி காமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருட்டும், குழந்தைகள் கடத்தலும் கடந்த சில மாதங்களாக திருப்பதி கோயிலில் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராக்கள் உதவியுடன் போலீசார் துப்பு துலக்கினர். இந்நிலையில் தான் சிசிடிவி காமிராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படும் கோயில் மற்றும் நான்கு மாட வீதிகளில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்னும் ஆறு மாத காலத்திற்குள் கோயில் முழுவதும் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications