தூத்துக்குடி துப்பாக்கி சூடு: பிரதமர் மோடிக்கு சசி தரூர் 'நச்' கேள்வி
திருவனந்தபுரம்: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடுக்கு அதிர்ச்சியடைந்த பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு மவுனமாக இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் ஒர்லான்டோவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "ஒர்லான்டோ துப்பாக்கி சூடு பற்றி அறிந்து அதிர்ச்சிடைந்தேன். உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கலையும், வேண்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார் மோடி.
இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, தமிழகத்தின் தூத்துக்குடியில் 13 இந்தியர்கள் போலீசால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு, மோடி பேசாமல் இருப்பதாக கூறி கருத்து படம் வெளியிடப்பட்ட மீம்ஸை ஷேர் செய்துள்ளார் ஷஷிதரூர். இது தமிழர்கள் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
#CompassionChallenge pic.twitter.com/9GdCvYDtdj
— Shashi Tharoor (@ShashiTharoor) May 24, 2018