மோடியின் பெயருக்கு முன் ஸ்ரீ பயன்படுத்தாததால் ராணுவ வீரருக்கு தண்டனை.. வலுக்கும் எதிர்ப்பு!
பிரதமர் மோடியின் பெயருக்கு முன் 'ஸ்ரீ' என்ற வார்த்தையை பயன்படுத்தாததால் இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
கொல்கத்தா: பிரதமர் மோடியின் பெயருக்கு முன் 'ஸ்ரீ' என்ற வார்த்தையை பயன்படுத்தாததால் இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியா வங்கதேச எல்லையில் மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சஞ்சீவ் குமார் என்ற வீரருக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக ராணுவத்தில் இருக்கிறார்.
எல்லையை பாதுகாப்பு இந்திய ராணுவத்தின் எல்லை பாதுகாப்பு படையில் இவர் பணியாற்றுகிறார். இவரது உயர் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்கள்.
தினமும் காலை
இந்த பாதுகாப்பு படை விதிப்படி தினமும் காலை பரேடில் சில விஷயங்கள் கேட்கப்படும். பொதுவாக அவர்கள் இருக்கும் படை குறித்த கேள்விகள் கேட்கப்படும். அதேபோல் சஞ்சீவ் குமாரிடம் அவரது படையின் தலைவர் அனுப் லால் பகத் சில கேள்விகளை கேட்டு இருக்கிறார்.
ஸ்ரீ இல்லை
அப்போது ஒரு கேள்வியின் பதிலுக்கு அவர் 'ஸ்ரீ மோடி திட்டம்' என்று கூறுவதற்கு பதிலாக 'மோடி திட்டம்' என்று கூறியுள்ளார். உடனே இவரை அவரது உயர் அதிகாரி கண்டித்துள்ளார். இது பெரிய குற்றம் என்றும் கூறியுள்ளார்.
சம்பளம் பிடித்தம்
இவரது மாத சம்பளத்தில் 7 நாள் சம்பளம் பிடிக்கப்பட்டு இருக்கிறது. இது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இவரது படையின் தலைவர் அனுப் லால் பகத் வெளியிட்டார். இது பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
சட்டம்
பிரதமரை இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை. ஆனால் இவர் மீது வேறு சட்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எல்லை பாதுகாப்பு படை சட்டம் 1968 பிரிவு 40ன் கீழ் விதிகளை மதிக்கவில்லை, ஒழுங்கற்று இருந்தார் என்று இவர் மீது தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
|
எதிர்ப்பு
இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இவர் ''இது மிகவும் மோசம் இப்படி செய்து இருக்க கூடாது'' என்றுள்ளார்.
|
அவமானமான செயல்
இவர் ''இது அவமானமான செயல். இந்த கட்டளையை கூறியவர் அவமானப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.