உ.பி.யில் அதிர வைக்கும் அடுத்த கொடூரம்: கண்களை பிடுங்கி சிறுவர்கள் படுகொலை!!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அம்மாநிலத்தில் கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் 2 சிறுவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹசன்காஞ்ச் என்ற பகுதியில் திருமண விழாவுக்கு ரத்னேஷ் மற்றும் பரத் சிங் என்ற இரண்டு சிறுவர்கள் சென்றிருந்தனர். இருவரும் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி அலைந்தனர்.

ஆனாலும் சிறுவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மறுநாள் காலை ஒரு மரத்திற்கு அடியில் சிறுவர்கள் பிணமாக காணப்பட்டனர். அவர்களின் கண்கள் பிடுங்கப்பட்டு வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்கள் இருந்தன.

இதனையடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து நடந்து வரும் பலாத்கார சம்பவத்தால் கடும் நெருக்கடியில் உள்ள அகிலேஷ் அரசுக்கு தற்போதைய சம்பவம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+