For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.. ஜம்முவில் இரு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயம்!

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் லால் சவுக்கில் மைசுமா எனும் இடம் உள்ளது. இந்த இடத்தில் திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அங்கிருந்த சிஆர்பிஎஃப் படைவீரர்கள் இருவர் காயமடைந்தனர்.

 Two CRPF jawans injured in terrorist attack, Srinagar

அவர்கள் விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சோதனை சாவடி அருகே ஏராளமான சிஆர்பிஎஃப் வீரர்கள் இருந்த போதிலும் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

தீவிரவாதிகள் எங்கிருந்து துப்பாக்கியால் சுட்டனர் என்பது குறித்து பாதுகாப்புப் படையினர் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முன்னதாக பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போலீஸாரும் பாதுகாப்பு படையினரும் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதங்களும் வெடிப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன. அது போல் பீகாரை சேர்ந்த பட்லாஷ்வர் குமார், ஜோகோ சவுத்ரி ஆகிய இரு உள்ளூர்வாசிகளும் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்தனர்.

எல்லையை ஒட்டிய பகுதிகளில் தீவிரவாதி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

English summary
Two CRPF jawans injured in terrorist attack, Srinagar. Investigation going on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X