தானேவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 82 வயது கணவன், 78 வயது மனைவி பலி
தானே: தானேவில் உள்ள சுந்தர்பான் பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் 12வது மாடியில் தீப்பிடித்ததில் கணவன், மனைவி ஆகிய 2 பேர் உடல் கருகி பலியாகினர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள சம்தா நகரில் சுந்தர்பான் பார்க் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 12வது மாடியில் இன்று காலை 6 மணிக்கு தீப்பிடித்தது.
இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 4 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
மின் கசிவால் தான் தீ விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிவாஜிராவ் சௌகுலே(82) மற்றும் அவரது மனைவி நிர்மலா(78) ஆகியோர் உடல் கருகி பலியாகினர். இது தவிர மேலும் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் பலர் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.