மழைக்கு ஒதுங்கிய இரு பெண்களை சீரழித்த...போலீஸ் அதிகாரியின் மகன் உள்பட 8 பேர்!
ஆந்திர மாநிலத்தில் கடும் மழை பெய்ததால் அங்குள்ள கட்டடத்தில் ஒதுங்கிய இரு பெண்களை 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய இரு இளம்பெண்கள் மழைக்காக கட்டடத்தில் ஒதுங்கியபோது அவர்களை பலாத்காரம் செய்த காவல்துறை அதிகாரியின் மகன் உள்பட 8 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள டஜாங்கி என்ற பகுதியில் கடந்த 20-ம் தேதி திருவிழா ஒன்று நடைபெற்றது. இதில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். இதில் ஏராளமானோர் கலந்து கொள்வர்.
இந்நிலையில் இந்த கலைநிகழ்ச்சிகளை காண அப்பகுதியைச் சேர்ந்த இரு இளம்பெண்கள் தங்கள் நண்பர்களுடன் வந்திருந்தனர். அப்போது கனமழை பெய்யத் தொடங்கியது.

மழையில் நனைந்தபடி
இதைத் தொடர்ந்து மழையில் நனைந்தபடி வீடு திரும்ப இரு பெண்களும் முயற்சித்தனர். எனினும் அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை.

கட்டடத்தில் ஒதுங்கிய...
இதனால் அங்கிருந்த ஒரு கட்டடத்தில் இருவரும் சென்று தங்கள் நண்பர்களுடன் ஒதுங்கினர். அவர்களை அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதியின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் பார்த்தனர்.

பலவந்தமாக தூக்கி சென்றனர்
பின்னர் அந்த அரசியல்வாதியின் மகன் உள்பட 8 பேர் கொண்ட கும்பல் அந்த இரு பெண்களையும் பலவந்தமாக மறைவான இடத்துக்கு தூக்கி சென்றனர். இதைத் தடுத்த பெண்களின் நண்பர்களை அடித்து உதைத்தனர்.

பலாத்காரம் செய்தனர்
பின்னர் அந்த இரு பெண்களையும் 8 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து அந்த இளம் பெண்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸார் அந்த 8 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த கும்பலில் காவல் துறை அதிகாரி ஒருவரின் மகனும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications