"சிக்னல் கோளாறு".. தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதிய இன்னொரு ரயில்.. ஜார்கண்ட்டில் கோர விபத்து
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. அதன் பெட்டிகள் பக்கத்து தண்டவாளத்தில் கிடந்தபோது அதில் மோதி இன்னொரு சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 20 பெட்டிகள் சிதறி கிடப்பதால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் சண்டில் ரயில் நிலையம் அருகே இன்று காலை 4.15 மணிக்கு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் புருலியா நோக்கி சென்றது. அப்போது திடீரென்று சரக்கு ரயில் தடம் புரண்டது.

ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. சில பெட்டிகள் அருகே செல்லும் இன்னொரு தண்டவாளத்தில் விழுந்தது. இந்த வேளையில் அந்த தண்டவாளத்தில் இன்னொரு ரயில் வந்தது. ஏற்கனவே தடம்புரண்ட ரயிலின் பெட்டியின் மீது அந்த சரக்கு ரயில் மோதியது.
இதனால் ஒரே இடத்தில் 2 சரக்கு ரயில்களும் விபத்துக்குள்ளாகின. மொத்தம் 20 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. விபத்துக்குள்ளான 2 ரயில்களும் சரக்கு ரயில்கள் என்பதால் அதிர்ஷ்வடசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் 2வது ரயில் விபத்துக்குள்ளானதற்கு சிக்னல் கோளாறு காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வுருகிறது. ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். இந்த விபத்து காரணமாக தண்டவாளம் 200 மீட்டர் தூரத்துக்கு சேதமாகி உள்ளது. அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வுருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக சண்டில் - டாடா நகர், சண்டில் - முரி, சண்டில் - புருலியா - போகரோ வழித்தடங்களுக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களுக்கு ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் பல ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எந்தெந்த வழித்தடங்களில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அந்த வழித்தடங்களுக்கு பஸ் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications