தேசிய கீதத்தை அவமதித்த 2 பத்திரிக்கையாளர்கள் ராணுவ நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ நிகழ்ச்சியின்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அமர்ந்திருந்த 2 பத்திரிக்கையாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியில் மூத்த பிடிபி தலைவரும், மாநில வருவாய்த் துறை அமைச்சருமான செய்யது பஷாரத் அகமது கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின்போது தேசிய கொடியை ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த 2 பத்திரிக்கையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை.
இதையடுத்து ராணுவ அதிகாரி ஒருவர் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினார்.
வெளியேற்றப்பட்ட பத்திரிக்கையாளர்களில் ஒருவரான காஷ்மீர் ரீடர் செய்தியாளர் ஜுனைத் பஸாஸ் கூறுகையில்,
நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிக்க தான் ராணுவம் எங்களை அழைத்தது. தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நான் செய்திக்கு குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு என்னிடம் வந்த கர்னல் பர்ன் நான் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாகக் கூறி அங்கிருந்து வெளியேறச் சொன்னார் என்றார்.
வெளியேற்றப்பட்ட மற்றொரு பத்திரிக்கையாளர் ரைசிங் காஷ்மீர் செய்தித்தாளை சேர்ந்தவர்.












Click it and Unblock the Notifications