கேரளாவில் பரிதாபம்: அருகருகே வசித்த 2 குடும்பங்களை சேர்ந்த 6 பேர் கூட்டாக தற்கொலை!
கொல்லம்: கேரளாவில் அருகருகே வசித்துவந்த இரு குடும்பத்தினைச் சேர்ந்த 6 பேர் கூட்டாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டம் பரவூரில் வசித்து வந்தவர் அர்ச்சனா. இவருக்கு அனு, பொன்னி என 2 குழந்தைகள் இருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டரான அர்ச்சனா சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரதீஷ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டரான இவருக்கு சரண்யா என்ற மனைவியும், உண்ணி என்ற மகனும் இருந்தனர்.
பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்த இந்த 2 குடும்பமும் நேற்று திடீரென தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
பரவூரில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ள இந்த தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், பண பிரச்சினை தொடர்பாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். எனினும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications