இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோடு உள்ளது. இதன் வழியாக நேற்றிரவு தீவிரவாதிகள் சிலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். கண்காணிப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில், ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

இதுபற்றி ராணுவ அதிகாரி கூறியது:
ஏப்ரல் 25, 28 மற்றும் மே 3ம்தேதிகளில் இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவம் பதிலடி கொடுப்பதில் கவனம் செலுத்தஆரம்பிக்கும்போது தீவிரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊருடுவ விடுவது பாகிஸ்தானின் திட்டம். ஆனால் இந்திய ராணுவம் இதை உணர்ந்து பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் அதே நேரத்தில் தீவிரவாதிகளையும் ஈடுருவ விடாமல் தடுத்துவருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications