லலித் மோடி மனைவி சிகிச்சை பெற்ற போர்ச்சுகல் ஹாஸ்பிடலுடன் ஒப்பந்தம் போட்ட ராஜஸ்தான் அரசு!!
டெல்லி: ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியின் மனைவி சிகிச்சை பெற்ற போர்ச்சுகலின் லிஸ்பன் மருத்துவமனையுடன் ராஜஸ்தான் அரசு ஒப்பந்தம் போட்டிருப்பது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஐ.பி.எல். நிதிமுறைகேடுகளில் சிக்கிய இந்தியாவை விட்டு தப்பி ஓடியவர் லலித் மோடி. லண்டனில் உள்ள லலித் மோடியின் மனைவி போர்ச்சுகல் நாட்டில் சிகிச்சை பெறுவதற்காக விசா உதவிகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் என்கிற விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

சுஷ்மா ஸ்வராஜ் மட்டுமல்ல ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரராஜேவும் தமக்கு உதவியதாகவும் தமது மனைவி போர்ச்சுகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது வசுந்தரராஜேவும் உடனிருந்தார் எனவும் லலித் மோடி உண்மைகளை போட்டு உடைத்து வருகிறார்.
முன்னதாக வசுந்தரராஜே சிந்தியாவின் மகனின் நிறுவனத்துக்கு லலித் மோடி ரூ11.63 கோடி பணத்தை கைமாறியது குறித்தும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் லலித் மோடியின் மனைவி, போர்ச்சுகலில் லிஸ்பனில் சிகிச்சை பெற்ற மருத்துவமனையுடன் ராஜஸ்தானின் வசுந்தரராஜே சிந்தியா தலைமையிலான அரசு ஒப்பந்தம் போட்டிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்காக நிலத்தையும் ராஜஸ்தான அரசு ஒதுக்கியிருதது. அப்போது இது குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்த வசுந்தரராஜே சிந்தியா, மாநில மக்களின் நலனுக்காகவே இத்தகைய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றெல்லாம் கூறியிருந்தார்.
ஆனால் லலித் மோடியின் மனைவியுடன் அந்த மருத்துவமனையில் உடன் இருந்ததை எல்லாம் மறைத்துவிட்டு ஏதோ ஒரு ஆதாயத்துக்காக இந்த ஒப்பந்தத்தை வசுந்தரராஜே தலைமையிலான அரசு செய்துள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலகக் குரலை எழுப்புகின்றன. ஆனால் அப்படி எந்த ஒரு உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை என அடித்துச் சொல்கிறது ராஜஸ்தான் பாரதிய ஜனதா.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications