அமர்நாத் சென்ற சென்னை யாத்ரீகர்கள் 2 பேர் 'மாரடைப்பால்' மரணம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அமர்நாத் குகை கோவிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க சென்ற சென்னையை சேர்ந்த 2 யாத்ரீகர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த 2 யாத்ரீகர்கள் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தனர்.

நடப்பு ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த மாதம் 28ந் தேதி தொடங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அமர்நாத் குகைக் கோவிலுக்கு இதுவரை 1,12,143 பேர் சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
இதில் நேற்று மட்டும் 18,994 யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், அமர்நாத் யாத்திரை சென்ற சென்னையைச் சேர்ந்த ரேணுகா (வயது 67) என்பவர் குகைக் கோவில் அருகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதேபோல் சென்னையைச் சேர்ந்த மற்றொரு யாத்ரீகர் ஜே. ஆறுமுகம் (61) என்பவர் குகைக் கோவில் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இதனையடுத்து இந்த ஆண்டு அமர்நாத் சென்றபோது உயிரிழந்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications