சித்தராமையாவோ, எடியூரப்பாவோ அல்ல.. கர்நாடகாவின் அடுத்த முதல்வர் குமாரசாமி? சர்வே சொல்லும் சீக்ரெட்
Recommended Video

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக, இதுவரை வந்துள்ள இரு டிவி சேனல்களின் சர்வேக்களும் இம்மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளன.
கர்நாடகாவில் மே 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டியுள்ளது. ஆனால், தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கடந்த 13ம் தேதி வெளியான, இந்தியா டுடே சர்வே, மற்றும் நேற்று வெளியான ஏபிபி டிவி சர்வே இரண்டுமே இதைத்தான் ஆணித்தரமாக கூறுகின்றன.

இரு சர்வேக்கள்
கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்றே இந்தியா டுடே மற்றும் ஏபிபி டிவி சர்வேக்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெறும் என்று ஏபிபி சர்வேயும், காங்கிரஸ்தான் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்று இந்தியா டுடேவும் தெரிவிக்கின்றன. இதில் மட்டுமே லேசான வேறுபாடு உள்ளது.

காங்கிரஸ், பாஜக வாய்ப்பு
உதாரணத்திற்கு, பாஜக 89-95 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு என்கிறது ஏபிபி சர்வே. காங்கிரஸ் கட்சி 90-101 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு என்கிறது இந்தியா டுடே சர்வே. இரண்டு சர்வேக்களுக்கும் நடுவே பெரிய அளவுக்கு தொகுதி கணிப்பில் வித்தியாசம் இல்லை என்பதை வைத்து பார்க்கும்போது கர்நாடகாவில் தொங்கு சட்டசபைதான் அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மஜதவுக்கு வாய்ப்பு
அதேநேரம் இவ்விரு கருத்து கணிப்புகளிலுமே மதசார்பற்ற ஜனதாதளம் கணிசமான இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மஜத கட்சி தலைமையே எதிர்பார்த்திருக்காது என்பதுதான் கள நிலவரம். ஆனால், அக்கட்சி முதல்வர் வேட்பாளர் எச்.டி.குமாரசாமிக்கு மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கு அதிகரித்துள்ளதே, அக்கட்சிக்கு இத்தனை சீட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்புகள் வெளியாக காரணம் என்று தெரிகிறது.

கிங் மேக்கர் மஜத
மதசார்பற்ற ஜனதாதளம் 32-38 தொகுதிகளை வெல்லும் என்று ஏபிபி கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. மதசார்பற்ற ஜனதாதளம் 34-43 தொகுதிகளை கைப்பற்றும் என்று இந்தியா டுடே கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவை 113 சீட்டுகள். ஆனால் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுமே அந்த மேஜிக் நம்பரை தொடப்போவதில்லை என்பதே டிவி சேனல்களின் கருத்து கணிப்பாக உள்ளது.

முந்தைய கூட்டணிகள்
இந்த சூழ்நிலையில், மதசார்பற்ற ஜனதாதளம்தான் கிங் மேக்கர் கட்சியாக மாறப்போகிறது. அக்கட்சி யாருக்கு ஆதரவளிக்கிறதோ அந்த கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும். கடந்த 2006ம் ஆண்டு, தரம்சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்று பாஜகவுக்கு ஆதரவளித்தது மதசார்பற்ற ஜனதாதளம். அப்போது குமாரசாமி முதல் 20 மாதங்களும், அடுத்த 20 மாதங்கள் பாஜகவின் எடியூரப்பாவும் முதல்வராக பதவி வகிப்பது என ஒப்பந்தம் போடப்பட்டது. முதல் 20 மாதங்கள் எடியூரப்பா துணை முதல்வராக பதவி வகித்தார். எனவே காங்., பாஜக இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்த அனுபவம் மஜதவுக்கு உள்ளது.

குமாரசாமிக்கே முதல்வர் பதவி
ஆனால், 20 மாதங்கள் கழித்து முதல்வர் பதவியை விட்டுத்தர குமாரசாமி மறுத்துவிட்டார். இதனால் ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றது பாஜக. இதன்பிறகு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இந்த தேர்தலிலும் தொங்கு சட்டசபை அமைந்தால், குமாரசாமியை முதல்வராக்கும் கட்சிக்கே ஆதரவு என மதசார்பற்ற ஜனதாதளம் கோரிக்கைவிடுக்கும் என்று தெரிகிறது. முதல் இரண்டரை ஆண்டுகள் தன்னையே முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையை குமாரசாமி முன் வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே பாஜகவோ அல்லது காங்கிரசோ யார் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், அடைமழை என்னவோ குமாரசாமி காட்டில்தான் என்கிறது கர்நாடக வட்டாரம்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications