40 வயது பெண்ணைத் தூக்கிச் சென்று பஸ்ஸுக்குள் பலாத்காரம் செய்த டிரைவர், கண்டக்டர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் பேருந்துக்காக நின்றிருந்த பெண்ணை தனியார் பேருந்து டிரைவரும், கண்டக்டரும் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் கோத்வாலி பகுதியில் நேற்றிரவு சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக தனியார் பேருந்து ஒன்று வந்துள்ளது. அதில் இருந்து இறங்கிய அப்பேருந்தின் டிரைவரும், கண்டக்டரும் அப்பெண்ணை பேருந்திற்குள் இழுத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

U.P. : Driver, conductor arrested in rape case

அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பேருந்திற்குள் ஏறி, அப்பெண்ணை மீட்டுள்ளனர். பின்னர் அப்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே அந்த தனியார் பேருந்து டிரைவர் பிரிஜேந்திராவையும், கண்டக்டர் ஜிதேந்திராவையும் பொதுமக்கள் போலீசில் பிடித்துக் கொடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+