"விதியை யாரால் தடுக்க முடியும்"- உ.பி. நிருபர் எரிக்கப்பட்டது குறித்து அமைச்சர் சர்ச்சை கருத்து!!
அலகாபாத்: உத்தரப் பிரதேசத்தில் நிருபர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைப் பற்றி விதியை யாரால் தடுக்க முடியும்' என அமைச்சர் ஒருவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நிருபர் ஜாகேந்திர சிங். இவர் உ.பி. பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா பற்றி சில கருத்துக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

சட்டவிரோத சுரங்கம் மற்றும் நில அபகரிப்பு விவகாரங்களில் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி அன்று இவரது வீட்டில் போலீசார் சோனை நடத்தியுள்ளனர். அப்போது அவரை சிலர் உயிருடன் எரித்ததாகக் கூறப்படுகிறது.
பலத்த தீக்காயம் அடைந்த சிங், கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார். இறப்பதற்கு முன் அவர் அளித்த வாக்குமூலமும் டி.வி.யில் வெளியானது. அமைச்சர் என்னை எரிப்பதற்கு பதில் தாக்கியிருக்கலாம் என உருக்கமாக கூறியிருந்தார்.
அமைச்சரின் உத்தரவின்பேரில் போலீசார் சிலர்தான் ஜாகேந்திர சிங் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக ஜாகேந்திர சிங்கின் மகன் புகார் கூறியுள்ளார். இந்த வழக்கை வாபஸ் பெறும்படி தன்னை அமைச்சரின் ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அலகாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச தோட்டக்கலைத் துறை அமைச்சர் பரஸ்நாத் யாதவ், சில சம்பவங்கள் இயற்கையாக நடக்கின்றன. விதியை யாரால் தடுக்க முடியும் என கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications