வுிசா முறைகேடு... இன்போசிஸ் மீது ரூ. 215 கோடி அபராதம் விதிக்கும் அமெரிக்கா!
பெங்களூர்: சட்டவிரோதமாக விசாக்களைப் பயன்படுத்தியது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனம் மீது அமெரிக்க அரசு, 3.5 கோடி டாலர் அபராதத் தொகையை விதிக்கவுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் இது ரூ. 215.32 கோடியாகும்.
ஒரு நிறுவனம் மீது அமெரிக்கா விதிக்கும் வரலாறு காணாத அபாரதத் தொகையாகும் இது என்பதால் பரபரப்பு நிலவுகிறது.
இதுவரை அமெரிக்காவில் எந்த ஒரு நிறுவனத்திற்கும் இப்படி ஒரு அபராதத் தொகையை அமெரிக்க அரசு விதித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்த அபராதம்
இன்போசிஸ் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள தனது மற்றும் தான் சார்ந்த நிறுவனங்களில் ஊழியர்களை பணிக்கு அமர்த்தியபோது ஒர்க் விசாவுக்குப் பதில் விசிட்டர் விசாவை பெருமளவில் பயன்படுத்தியதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது முறைகேடானது என்பது அமெரிக்காவின் வாதமாகும்.

நாளை அபராதம் விதிக்கப்படும்
இன்போசிஸ் மீதான அபராத உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது.

எச்1பிக்குப் பதில் பி 1
குறுகிய கால வர்த்தகப் பயணத்திற்காக அமெரிக்க அரசு பி 1 விசாவை வழங்குகிறது. இது ஒர்க் விசா அல்ல. அமெரிக்காவில் பணியாற்ற வேண்டுமானால், வெளிநாட்டினர் எச்1 பி விசாவைத்தான் பெற வேண்டும். ஆனால் இன்போசிஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு பி 1 விசாவைப் பெற்று அங்கு அனுப்பி பணிகளைச் செய்ய வைத்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.

பெருமளவிலான ஊழியர்கள்
இப்படி முறைகேடாக விசாவைப் பயன்படுத்தி பல ஊழியர்களை சட்டவிரோதமாக நீண்ட காலம் தங்க வைத்து பணியில் அமர்த்தியதாகவும் இன்போசிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களின் வேலையைப் பறித்து விட்டனராம்
இதுதொடர்பாக விசாரணை நடத்திய விசாரணைக் குழுவினர், இன்போசிஸ் நிறுவனத்தின் செயலால், நல்ல தகுதியும், திறமையும் இருந்தும் அமெரிக்கர்களுக்கு வேலையிழப்பை ஏற்படுத்தியுள்ளது இன்போசிஸ். மேலும் அமெரிக்கர்களுக்கு அதிக சம்பளம் தர வேண்டும் என்பதற்காக, குறைந்த ஊதியத்தைப் பெறும் இந்தியர்களுக்கு தனது வேலைகளை இப்படி முறைகேடாக விசாக்களைப் பயன்படுத்தி அது செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளதாம்.

இன்போசிஸ் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து இன்போசிஸ் வெளியிட்டுள்ள இமெயில் செய்தியில், இதுதொடர்பாக தங்களது அமெரிக்க வழக்கறிஞர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications