ஈராக்கில் இருந்து திரும்பிய இந்திய நர்சுகளுக்கு வேலை தர தயார்!: துபாய் தொழிலதிபர் அறிவிப்பு
திருவனந்தபுரம்: ஈராக்கில் தீவிரவாதிகளிடமிருந்து விடுதலையாகி இந்தியா திரும்பியுள்ள நர்ஸ்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தயாராக உள்ளதாக அரபு நாட்டு தொழிலதிபர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஈராக்கின் திக்ரித் நகரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய தூத்துக்குடி நர்ஸ் மோனிஷா மற்றும் 45 கேரள நர்சுகளும், மொசூல் நகரத்துக்கு தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை தீவிரவாதிகள் 46 நர்சுகளையும் விடுதலை செய்வதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து நர்சுகள் அனைவரும் எர்பில் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து, ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலமாக இந்தியா வந்துள்ளனர்.
இந்நிலையில், வேலையிழந்து திரும்பும் அந்த நாற்பத்தாறு நர்சுகளுக்கும் பணி அளிக்க தயாராக உள்ளதாக அரபு நாட்டில் தொழில் செய்யும், இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி என்பவர் மலையாள தினசரி பத்திரிகைகளில் விளம்பரம் அளித்துள்ளார். இவரின்கீழ், அரபு நாடுகளில் மட்டுமல்லாது, இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளிலும் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
தனக்கு சொந்தமான மருத்துவமனைகளில் நர்சுகளுக்கு வேலைவாய்ப்பளிக்க தயாராக உள்ளதாகவும், அவர்களுக்கு சம்மதம் என்றால் தனது அலுவலகத்தை அணுகலாம் என்றும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications