உபேர் நிறுவனம் மீது கடுப்பில் டிரைவர்கள்: வேலைநிறுத்தத்தில் குதிக்கும் சூழல்
பெங்களூர்: உபேர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதால் டிரைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெங்களூரில் செயல்படும் உபேர் டாக்சி நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். உபேர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாகவும் தங்களை கண்டுகொள்வது இல்லை என்றும் டிரைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் புகார் அளித்தால் அவர்கள் தரப்பு நியாயத்தை மட்டுமே நிறுவனம் கேட்கிறதே தவிர தங்கள் தரப்பு நியாயத்தை கேட்பதே இல்லை என்கிறார்கள் டிரைவர்கள். மேலும் வாடிக்கையாளர்கள் குறைவான ரேட்டிங் அளித்தாலும், தொடர்ந்து யார் மீதாவது புகார் அளித்தாலும் அந்த டிரைவர்களை உபேர் நிறுவனம் பணிநீக்கம் செய்து வருவதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை.
போதிய ஆவணங்கள் அளிக்காதவர்கள் அல்லது வாடிக்கையாளர்களுடன் பிரச்சனை செய்தவர்களை தான் பணிநீ்க்கம் செய்துள்ளதாக உபேர் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் மீது அதிருப்தியில் உள்ள டிரைவர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்யக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் டிரைவர்கள் இன்று வழக்கம் போன்று பணிக்கு வந்துள்ளனர்.
உபேர் நிறுவனத்தில் சேரும் டிரைவர்களுக்கு இலவசமாக செல்போன் தருகிறார்கள். ஆனால் அதற்கான இன்டர்நெட் கட்டணமாக வாரம் ரூ.300 பிடித்துக் கொள்கிறார்கள் என்று டிரைவர்கள் குமுறுகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications