நாட்டை அதிர வைத்த உதய்பூர் படுகொலை.. "பாஜகவுடன் கொலையாளிகளுக்கு தொடர்பு.." பகீர் குற்றச்சாட்டு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மிக விரைவில் தேர்தல் நடக்கும் நிலையில், கடந்தாண்டு அங்கு உதய்பூரில் நடந்த டெய்லர் படுகொலை இப்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
கடந்தாண்டு இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை நாட்டில் மிகப் பெரிய சர்ச்சையானது. பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கூறிய கருத்துக்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெற்றது.

கடந்த ஜூன் மாதம் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட டெய்லர் கன்னையா லால் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டனர்.
பாஜகவுடன் தொடர்பு: இந்த படுகொலை சம்பவம் அப்போது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த கொலை சம்பவத்தில் இரண்டு பேர் கைதும் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நிலைமை மீண்டும் இயல்பு நிலைக்கு வரவே சில வாரங்கள் வரை ஆனது. இதற்கிடையே ராஜஸ்தானில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த படுகொலை குறித்த சர்ச்சை மீண்டும் கிளம்பியுள்ளது.
சமீபத்தில் நடந்த பிரச்சாரம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், டெய்லர் கன்னையா லால் கொலையாளிகள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "அந்த கொலையாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு இருக்கிறது. கொலை சம்பவம் நடக்க சில நாட்களுக்கு முன்பு அதே நபர்களை போலீசார் வேறு ஒரு கேஸில் பிடித்தனர். அப்போது போலீஸ் நிலையம் வரை வந்து அந்த கொலையாளிகளை விடுவித்ததே பாஜக தலைவர்கள்தான்" என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
என்ன நிலைமை: மேலும், ராஜஸ்தானில் சில நாட்களில் தேர்தல் நடக்கும் நிலையில், பாஜகவினர் திட்டமிட்டு வன்முறையைப் பரப்புவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்பு ராஜஸ்தானில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கன்னையா லால் படுகொலையைக் குறிப்பிட்டார். மேலும், பயங்கரவாதிகளுக்குக் காங்கிரஸ் அனுதாபம் காட்டுவதாகவும் விமர்சித்தார்.
இது தொடர்பாகப் பிரதமர் மோடி கூறுகையில், "கன்னையா லால் படுகொலை என்பது மாநில அரசுக்கு மிகப் பெரிய கறை. பயங்கரவாதிகளுக்கு அனுதாபம் காட்டும் காங்கிரஸ் அரசு இருப்பதால்தான் உதய்பூரில் இப்படியொரு மோசமான சம்பவம் நடந்துள்ளது" என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
ஏன் பேசுகிறார்கள்: அசோக் கெலாட் மேலும் கூறுகையில், "தேர்தலில் தோல்வி உறுதி என்பதை உணர்ந்த பாஜக ஏதேதோ காரணங்களை உளறி வருகிறது. நாங்கள் அறிமுகப்படுத்திய திட்டங்கள் குறித்தும் சட்டங்கள் குறித்தும் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தேர்தல் நடப்பதால் சும்மா வேண்டுமென்றே பிரச்சினையைக் கிளப்பும் வகையில் பேசுகிறார்கள்.

கன்னையா லால் கொலை வழக்கு விசாரணையைத் தேசிய புலனாய்வு முகமை விசாரித்தது. அவர்களை விட ராஜஸ்தான் போலீசார் சிறப்பாக விசாரித்திருப்பார்கள். விசாரணை விரைவாக நடந்து இருக்கும். ஆனால், கொலை நடந்த உடனேயே என்ஐஏ அவசர அவசரமாக விசாரிக்க வந்தார்கள். அப்போது அதற்குக் கூட நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதுவரை இந்த வழக்கில் என்ஐஏ என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என யாருக்கும் தெரிவில்லை. ராஜஸ்தான் போலீசார் அதை விசாரித்திருந்தால் கொலையாளிகளுக்கு இந்நேரம் தண்டனை கிடைத்திருக்கும்.
பாஜக தலைவர்கள்: அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். அந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் நான் எனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு உடனடியாக உதய்பூருக்குப் புறப்பட்டேன். ஆனால், பாஜகவினர் உதய்பூர் சம்பவத்தை அறிந்த பிறகும் பொறுமையாக ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அப்படிப்பட்ட நபர்கள்தான் இப்போது தேவையில்லாமல் தேர்தல் வருவதால் இதைப் பற்றிப் பேசுகிறார்கள்" என்றார்.
-
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications