மகாராஷ்டிராவில் இந்தி திணிப்புக்கு எதிராக இணைந்த உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே- பாஜகவுக்கு வார்னிங்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளிலேயே இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்கி திணிக்கும் மத்திய பாஜக அரசுக்கு சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவின் ராஜ்தாக்கரே ஆகியோர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை முன்வைக்கும் மும்மொழிக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3-வது மொழியாக இந்தி மொழியை கட்டாயமாக கற்க அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை என்ற பெயரிலான இந்தி மொழி திணிப்புக்கு ஏற்கனவே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது மகாராஷ்டிராவும் இணைந்துள்ளது.
மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிப்பை ஒருபோதும் ஏற்கவே முடியாது என்று சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்ரே ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்த இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக இருந்த நிலையில் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்ட களத்தில் இணைந்து செயல்படவும் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராஜ்தாக்கரே கூறுகையில், இந்தி மொழி திணிப்பு போன்ற பெரிய பிரச்சனைகள் தலைதூக்கும் போது எங்களுக்கு இடையேயான விவகாரங்கள் மிக சிறியதாகிவிடும். மகாராஷ்டிராவின் நலன்களுக்காக, மராத்தி மக்களுக்காக எங்களுக்கு இடையேயான மோதல்களை கைவிட்டுவிட்டு ஒருங்கிணைந்து செயல்படப் போகிறோம் என்றார்.
ராஜ்தாக்கரேவின் கருத்துக்கு ஆதரவாக பதிலளித்துள்ள உத்தவ் தாக்கரே, நானும் எங்களிடையேயான சிறு சிறு பிரச்சனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மராத்திய மக்களின் நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்பட தயார். அதற்கு முன்னதாக, மகாராஷ்டிரா மக்களின் நலனுக்கு எதிரான சக்திகளை வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பதை நிறுத்த வேண்டும். மராத்தி மக்களின் நலனுக்காக மட்டும் போராட வேண்டும் என்றார்.

சிவசேனாவின் நிறுவனரான பால்தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்தவர் ராஜ்தாக்கரே. சிவசேனாவுடனான கருத்து வேறுபாடுகளால் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என தனிக்கட்சி தொடங்கினார் ராஜ்தாக்கரே. பாஜகவின் நட்பு சக்தியாகவே ராஜ்தாக்கரே இருந்தும் வந்தார். அண்மைக்காலமாக மராத்தி மொழி பாதுகாப்பு, இந்தி மொழி திணிப்பு ஆகியவற்றில் பாஜகவை மிக கடுமையாக எதிர்க்கிறார் ராஜ்தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications