மகாராஷ்டிராவில் இந்தி திணிப்புக்கு எதிராக இணைந்த உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே- பாஜகவுக்கு வார்னிங்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளிலேயே இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்கி திணிக்கும் மத்திய பாஜக அரசுக்கு சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவின் ராஜ்தாக்கரே ஆகியோர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை முன்வைக்கும் மும்மொழிக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3-வது மொழியாக இந்தி மொழியை கட்டாயமாக கற்க அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை என்ற பெயரிலான இந்தி மொழி திணிப்புக்கு ஏற்கனவே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது மகாராஷ்டிராவும் இணைந்துள்ளது.
மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிப்பை ஒருபோதும் ஏற்கவே முடியாது என்று சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்ரே ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்த இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக இருந்த நிலையில் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்ட களத்தில் இணைந்து செயல்படவும் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராஜ்தாக்கரே கூறுகையில், இந்தி மொழி திணிப்பு போன்ற பெரிய பிரச்சனைகள் தலைதூக்கும் போது எங்களுக்கு இடையேயான விவகாரங்கள் மிக சிறியதாகிவிடும். மகாராஷ்டிராவின் நலன்களுக்காக, மராத்தி மக்களுக்காக எங்களுக்கு இடையேயான மோதல்களை கைவிட்டுவிட்டு ஒருங்கிணைந்து செயல்படப் போகிறோம் என்றார்.
ராஜ்தாக்கரேவின் கருத்துக்கு ஆதரவாக பதிலளித்துள்ள உத்தவ் தாக்கரே, நானும் எங்களிடையேயான சிறு சிறு பிரச்சனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மராத்திய மக்களின் நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்பட தயார். அதற்கு முன்னதாக, மகாராஷ்டிரா மக்களின் நலனுக்கு எதிரான சக்திகளை வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பதை நிறுத்த வேண்டும். மராத்தி மக்களின் நலனுக்காக மட்டும் போராட வேண்டும் என்றார்.

சிவசேனாவின் நிறுவனரான பால்தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்தவர் ராஜ்தாக்கரே. சிவசேனாவுடனான கருத்து வேறுபாடுகளால் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என தனிக்கட்சி தொடங்கினார் ராஜ்தாக்கரே. பாஜகவின் நட்பு சக்தியாகவே ராஜ்தாக்கரே இருந்தும் வந்தார். அண்மைக்காலமாக மராத்தி மொழி பாதுகாப்பு, இந்தி மொழி திணிப்பு ஆகியவற்றில் பாஜகவை மிக கடுமையாக எதிர்க்கிறார் ராஜ்தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications