Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிராவில் இந்தி திணிப்புக்கு எதிராக இணைந்த உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே- பாஜகவுக்கு வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளிலேயே இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்கி திணிக்கும் மத்திய பாஜக அரசுக்கு சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவின் ராஜ்தாக்கரே ஆகியோர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை முன்வைக்கும் மும்மொழிக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3-வது மொழியாக இந்தி மொழியை கட்டாயமாக கற்க அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை என்ற பெயரிலான இந்தி மொழி திணிப்புக்கு ஏற்கனவே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது மகாராஷ்டிராவும் இணைந்துள்ளது.

மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிப்பை ஒருபோதும் ஏற்கவே முடியாது என்று சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்ரே ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்த இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக இருந்த நிலையில் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்ட களத்தில் இணைந்து செயல்படவும் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராஜ்தாக்கரே கூறுகையில், இந்தி மொழி திணிப்பு போன்ற பெரிய பிரச்சனைகள் தலைதூக்கும் போது எங்களுக்கு இடையேயான விவகாரங்கள் மிக சிறியதாகிவிடும். மகாராஷ்டிராவின் நலன்களுக்காக, மராத்தி மக்களுக்காக எங்களுக்கு இடையேயான மோதல்களை கைவிட்டுவிட்டு ஒருங்கிணைந்து செயல்படப் போகிறோம் என்றார்.

ராஜ்தாக்கரேவின் கருத்துக்கு ஆதரவாக பதிலளித்துள்ள உத்தவ் தாக்கரே, நானும் எங்களிடையேயான சிறு சிறு பிரச்சனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மராத்திய மக்களின் நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்பட தயார். அதற்கு முன்னதாக, மகாராஷ்டிரா மக்களின் நலனுக்கு எதிரான சக்திகளை வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பதை நிறுத்த வேண்டும். மராத்தி மக்களின் நலனுக்காக மட்டும் போராட வேண்டும் என்றார்.

Anti Hindi

சிவசேனாவின் நிறுவனரான பால்தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்தவர் ராஜ்தாக்கரே. சிவசேனாவுடனான கருத்து வேறுபாடுகளால் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என தனிக்கட்சி தொடங்கினார் ராஜ்தாக்கரே. பாஜகவின் நட்பு சக்தியாகவே ராஜ்தாக்கரே இருந்தும் வந்தார். அண்மைக்காலமாக மராத்தி மொழி பாதுகாப்பு, இந்தி மொழி திணிப்பு ஆகியவற்றில் பாஜகவை மிக கடுமையாக எதிர்க்கிறார் ராஜ்தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+