யுக்ரைன் பதற்றம்: “ரஷ்யாவை போரிடும் சூழலுக்குள் தள்ள அமெரிக்கா முயற்சிக்கிறது” - புதின் குற்றச்சாட்டு
யுக்ரைனில் போர் புரியும் சூழலுக்குள் ரஷ்யாவை தள்ள, அமெரிக்கா முயற்சிப்பதாக புதின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பல வாரங்களாக நிலவும் யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி குறித்த தனது முதல் கருத்தைத் தெரிவித்துள்ள புதின், ரஷ்யா மீது அதிக தடைகளை விதிக்க ஒரு சந்தர்ப்பமாக, இந்த நெருக்கடியை பயன்படுத்துவதே அமெரிக்காவின் குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் நேட்டோ கூட்டணிப் படைகள் குறித்த ரஷ்யாவின் கவலைகளை அமெரிக்கா புறக்கணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
யுக்ரேன் எல்லைப் பகுதிகளுக்கு அருகில் ரஷ்யப் படைகள் குவிந்துள்ளதால் பதற்றம் அதிகமாக உள்ளது.
யுக்ரேனின் க்ரைமிய தீபகற்பத்தை தன்னுடன் இணைத்து கொண்டு, டான்பாஸின் கிழக்கு பகுதியில் போருக்கு ரஷ்யா ஆதரவளித்து, ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு, அந்நாடு ஒரு படையெடுப்பைத் திட்டமிடுவதாக மேற்கத்திய நாடுகள் கூறும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது.
- பதற்றத்தை உருவாக்காதீர்கள்: மேற்கு நாடுகளை கேட்கும் யுக்ரேன் அதிபர்
- உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்தால் புதின் மீது தனிப்பட்ட பொருளாதார தடை- அமெரிக்கா
மேலும், யுக்ரேனில் குறைந்தபட்சம் 14 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்றும், கிழக்கு பகுதியில் அமைதியை மீட்டெடுப்பதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் யுக்ரேன் அரசு தவறுவதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இதனால், ரஷ்யாவுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள் அப்பிரதேசத்தின் பல பகுதிகளை கட்டுப்படுத்துகிறது என்று அந்நாடு கூறுகிறது.
மாஸ்கோவில் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு, பேசிய புதின், "யுக்ரேனின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா பெரிதாக அக்கறை காட்டவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால், ரஷ்யாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதுதான் அதன் முக்கிய பணி. இந்த இலக்கை அடைவதற்கான ஒரு கருவியாக யுக்ரேன் இருப்பதாக நினைக்கிறேன்." என்றார்.
உலகின் மிகப்பெரிய அணு ஆயுதங்களை இப்போதும் கொண்டிருக்கும் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போர் (1947 ஆம் ஆண்டு -89ஆம் ஆண்டு ) காலத்திலிருந்தே உள்ளது. அப்போது ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக கம்யூனிச சோவியத் யூனியனின் முக்கியமான பகுதியாக யுக்ரேன் இருந்தது.
நேட்டோவின் கிழக்குப் பகுதிக்கு மேலும் விரிவடைவதைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை, சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான ரஷ்ய கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், ரஷ்யாவின் கவலைகளை அமெரிக்கா புறக்கணித்ததாக புதின் கூறுகிறார்
நேட்டோவில் இணைய அமெரிக்காவின் விருப்பத்தை யுக்ரேன் ஏற்றுக்கொண்டால், அது மற்ற உறுப்பினர்களை ரஷ்யாவுடன் போருக்கு இழுக்கக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
"யுக்ரேன் ஒரு நேட்டோ உறுப்பினராக இருந்து, ஒரு ராணுவ நடவடிக்கை [க்ரைமியாவை மீண்டும் கைப்பற்ற] தொடங்குகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன - நேட்டோவுடன் சண்டை போடப் போகிறோமா? இதைப் பற்றி யாராவது சிந்தித்தார்களா? அவர்கள் அதைப் பற்றி சிந்திக்கவில்லை என்று தெரிகிறது", என்று அவர் கூறுகிறார்.
யுக்ரேனுக்கு வருகை தந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், யுக்ரேனின் தலையைக் குறிவைத்து துப்பாக்கி வைத்துள்ளதாக புதின் மீது குற்றம் சாட்டினார். மேலும், "ராணுவப் பேரழிவில்" இருந்து பின்வாங்குமாறு ரஷ்யாவிற்கு அவர் அழைப்பு விடுத்தார்.
யுக்ரேனின் தலைநகரமான கீவ்வில், அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன்பேச்சு வார்த்தை நடத்திய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர் நிலை ஏற்பட்டால் யுக்ரைன் ராணுவம் போராடும் என்றார்.
"யுக்ரேனின் 2 லட்சம் ஆண்களும் பெண்களும் ஆயுதங்களுடன் உள்ளனர். அவர்கள் மிகவும் கடுமையான, நெருக்கடி தரும் எதிர்ப்பை முன்வைப்பார்கள். ரஷ்யாவில் உள்ள பெற்றோர்களும் தாய்மார்களும் அந்த உண்மையைப் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதிபர் புதின் போர் நெருக்கடி தரும் பாதையில் இருந்து பின்வாங்குவார் என்று நான் நம்புகிறேன். நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்". என்று அவர் கூறினார்.
மேலும், ரஷ்யப் படைகள் யுக்ரேன் எல்லைக்குள் கடக்கும் முதல் தருணத்தில், தடுப்பு நடவடிக்கைகளுடனும், பிற செயல்திட்டகளுடனும் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு பிரிட்டன் பதிலளிக்கும் என்று ஜான்சன் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து நிலையான ஆட்சியையும், சுதந்திரத்தையும் மேம்படுத்துவதற்காக யுக்ரேனுக்கு 119 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
"இது யுக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போராக இருக்காது. இது ஐரோப்பா முழுவதும் நடக்கும் போராக இருக்கும்" யுக்ரேன் அதிபர் தெரிவித்துள்ளார்.
லண்டன் நகரத்தின் மூலம் சலவை செய்யப்பட்ட கிரெம்ளினுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் "சட்டவிரோதமான பணத்தை" (Dirty Money) கையாள்வதற்கான பிரிட்டனின் எந்தவொரு நடவடிக்கையையும் தான் ஆதரிப்பதாக அவர் கூறுகிறார். மேலும், இது தொடர்பாக எந்தவொரு விரிவாக்கத்திற்கும் முன்னதாக தடுப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
பிற செய்திகள்:
- கோவை சூயஸ் திட்டம்: தேர்தல் நேரத்தில் சூடுபிடிக்கும் எதிர்ப்புப் போராட்டம்; திமுக நிலை என்ன?
- இந்திய பட்ஜெட் -2022 தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?
- இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு
- யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்
- நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை














Click it and Unblock the Notifications