கடனைத் திருப்பிச் செலுத்தாதற்காக வாலிபரை அடித்துக் கொலை செய்த கடன்காரர்கள்!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ரூ. 8 லட்சம் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்த நபரை, வீடு புகுந்து கடன் கொடுத்தவர்கள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மரணமடைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவர் துணிக் கடை வைத்திருந்தார். கடையை விரிவுபடுத்துவதற்காக முகம்மது ரியாஸ் மற்றும் காலித் ஆகியோரிடம் மொத்தமாக ரூ. 8 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
ஆனால் கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மஜீத் வீட்டுக்கு, காலித்தும், ரியாஸும் வந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் வெடித்தது. இதையடுத்து காலித்தும், ரியாஸும் சேர்ந்து மஜீத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மஜீத் படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை உஸ்மானியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்குப் பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அவரை மாற்றினர். அதன் பின்னர் அவரது நிலைமை மோசமானது. இதையடுத்து நிம்ஸ் மருத்துவமனைக்கு மஜீத்தை மாற்றினர். அங்கு அவர் கோமா நிலைக்குப் போய் விட்டார். இந்த நிலையில் மஜீத் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஹைதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகி விட்ட காலித், ரியாஸ் ஆகியோரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications