என்ன அதிசயம்!!!: பதவியேற்பு விழாவில் முலாயமின் கையை பிடித்து அழைத்துச் சென்ற அமித் ஷா
டெல்லி: மோடி பதவியேற்பு விழாவுக்கு வந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவை பாஜக தலைவர் அமித் ஷா கையை பிடித்து அழைத்துச் சென்ற அதிசயம் நடந்தது.
மோடி பதவியேற்பு விழா திங்கட்கிழமை மாலை டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்றது. எந்த முறையும் இல்லாமல் இம்முறை இந்திய பிரதமரின் பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிலையில் பதவியேற்பு விழாவில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றி பார்ப்போம்.
முலாயம்
விழாவுக்கு வந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவை அவருக்கு சற்றும் பிடிக்காத உ.பி. மாநில பாஜக தலைவர் அமித் ஷா கையை பிடித்து அழைத்துச் சென்றார்.
சுஷ்மா
கேபினட் அமைச்சராக பதவியேற்ற சுஷ்மா ஸ்வராஜ் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார் பாஜக மூத்த தலைவரான அத்வானி.
சோனியா
அத்வானி என்ன கூறினார் என்று தெரியவில்லை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜோராக சிரிக்கிறார்.
மன்மோகன்
இலங்கை அதிபர் ராஜபக்சே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கைகொடுக்க அவர் முகத்தில் சிரிப்பு எட்டிப்பார்த்தது. இதை அருகில் நின்று கவனித்துக் கொண்டிருப்பது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்.
அதானி, அம்பானி
பதவியேற்பு விழாவில் சிரித்துப் பேசி மகிழும் தொழில் அதிபர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி.
சோகம்
விழாவில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த சுஷ்மா ஸ்வராஜ் முகம் ஏனோ வாட்டமாகவே இருந்தது.