மத்திய பட்ஜெட்- 2015
-ஏழைகள், விவசாயிகள், பெருநிறுவனங்களை இலக்கு வைத்த 'ஜேட்லி பட்ஜெட்'
-தனி நபர் வருமான வரி செலுத்துவோருக்கு ரூ. 4,44,200 வரை வரி விலக்குகள் அறிவிப்பு- ஜேட்லி
-மாத ஊதியம் பெறுவோருக்கான பயண அலவன்ஸ் உச்சவரம்பு ரூ. 800ல் இருந்து ரூ. 1,600 ஆக அதகரிப்பு
-மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான வரி விலக்கு ரூ. 15,000ல் இருந்து 25,000 ஆக அதிகரிப்பு
-தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு முழு வரிவிலக்கு
-சேவை வரி 12.34%-ல் இருந்து 14% ஆக அதிகரிப்பு
-செல்வந்த வரி விதிப்பு முறை கைவிடப்படுகிறது
-ஆண்டு வருமானம் ரூ1 கோடிக்கு அதிகம் பெறுவோர் 2% வரி செலுத்த வேண்டும்
-மாத ஊதியம் வாங்குவோரின் வருமான வரியில் மாற்றம் இல்லை
-ரூ1 லட்சத்துக்கும் அதிகமான பணபரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம்
-மொத்த வரி வருவாய் ரூ. 14.49 லட்சம் கோடியாக இருக்கும்
-இந்த ஆண்டு மொத்த செலவு ரூ. 17.77 லட்சம் கோடியாக இருக்கும்
-திட்டச் செலவுகள் ரூ. 4.65 லட்சம் கோடி, திட்டம் சாரா செலவுகள் ரூ. 13.12 லட்சம் கோடி
-ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் பினாமிகள் பெயரில் சொத்துகள் வாங்கி குவிப்பதைத் தடுக்க சட்டம்
-வெளிநாட்டு முதலீடு, வங்கி முதலீடுகளை ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்
-வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது இதை அவசியம் செய்ய வேண்டும்
-கருப்பு பணம் பதுக்கினால் 10 ஆண்டு சிறை
-கருப்பு பணம் பதுக்கலை தடுக்க வரி விதிப்பில் திருத்தம்
-வெளிநாட்டு சொத்துகளை மறைத்தால் 7 ஆண்டுகள் சிறை
-வெளிநாட்டு முதலீடுகளை கணக்கில் காட்டாவிட்டால் கடும் நடவடிக்கை

-வெளிநாட்டில் கருப்புப் பணத்தை மறைத்து வைத்தால் 10 ஆண்டு சிறை
-வெளிநாட்டில் பதுக்கிய நிதியைப் போல் 300 சதவீதம் அபராதம்
-இதற்காக புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்
-தனிநபர் வருமான வரி விலக்கு சலுகை தொடரும்: அருண் ஜேட்லி
-கார்ப்பரேட் வரிக் குறைப்பு அடுத்த ஆண்டு முதல் அமலாகும்
-பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 25 சதவீதம் அதிகரிப்பு
-வர்த்தக நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு
-கார்பரேட் வரி குறைப்பு 4 ஆண்டுகள் அமலில் இருக்கும்
-பாதுகாப்புத் துறைக்கு ரூ2,46,727 கோடி ஒதுக்கீடு
-கல்வி, மதிய உணவிற்கு ரூ. 68,968 கோடி நிதி
-சுற்றுச் சூழலை பாதிக்காத மின்சார கார்கள் உற்பத்திக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு
-பீகார், மேற்கு வங்கத்துக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்: அருண் ஜேட்லி
-முதுகுவலி பிரச்சினை: பட்ஜெட் உரையை அமர்ந்து வாசித்தார் அருண் ஜெட்லி
-தமிழகம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல், அஸ்ஸாமில் எய்ம்எஸ் மருத்துவமனைகள்
-டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்
-பட்ஜெட் உரையை அமர்ந்து வாசிக்கிறார் நிதியமைச்சர்அருண் ஜெட்லி
-சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் கோரிக்கையை ஏற்றார்
-தேவையெனில் அமர்ந்தே பட்ஜெட் படியுங்கள் : சுமித்ரா மகாஜன்
-கடந்தமுறை பட்ஜெட் உரை வாசிக்கும் போது சிறிது ஓய்வு எடுத்தார் ஜெட்லி
-இந்திய தங்க நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் நாணய இறக்குமதி குறையும்
-அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் வெளியிடப்படும்
-தங்க பத்திரத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் தங்கத்தை அடகு வைப்பது குறையும்
-மின்சார கார்கள் உற்பத்திக்கு ரூ75 கோடி ஒதுக்கீடு
-நிர்பயா திட்டத்துக்கு கூடுதலாக ரூஆயிரம் கோடி ஒதுக்கீடு
-150 நாடுகளைச் சேர்ந்தோர் இந்தியாவுக்கு வந்து விசா பெற்றுக் கொள்ள அனுமதி
- இப்போது 43 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே இந்த வசதி உள்ளது
-100 நாள் ஊரக வேலை திட்டத்திற்கு 34,699 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
-அசோகச் சக்கரம் பொறித்த தங்க நாணயம் வெளியிடப்படும்
-தங்க பத்திரத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்
-கூடங்குளம் 2வது அணு உலையானது 2015-16ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கும்: அருண் ஜேட்லி
-தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
-நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ. 340 பில்லியனாக உள்ளது
-புதிய சாப்ட்வேர் நிறுவனங்கள் தொடங்க ரூ. 1,000 கோடி நிதி
-சுயதொழில் தொடங்குவோருக்கு உதவ ரூ. 1,000 கோடி
-4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுடைய 5 பெரும் மின் திட்டங்கள்
-ரயில்வே, சாலை திட்டங்களுக்கு நிதி திரட்ட வரியில்லா பத்திரங்கள்
-பள்ளிகளில் டி.சி பெறாமல் வெளியேறும் சிறுபான்மையினர் இன இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற புதிய சான்றிதழ் அறிமுகம்
-உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
-சிறுபான்மை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு 'நயி மன்சில்' திட்டம்
-முதியோர் பென்சன் திட்டம் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் அமலாகும்
-இதற்கான நிதி பிஎப் கணக்குகளில் கேட்பாரற்று கிடக்கும் பணம் மூலம் பெறப்படும்
-உரிமை கோரா பி.பி.எப். தொகை ரூ3 ஆயிரம் கோடி மற்றும் ஈ.பி.எப். தொகை ரூ6 ஆயிரம் கோடி முதியோர் நலனுக்கு ஒதுக்கீடு
-நாடு முழுவதும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் திட்டம் அமலாக்கப்படும்
-ஆண்டுக்கு ரூ. 12 செலுத்தினால் விபத்தில் பலியானவருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்
-முதியோருக்கு பென்சன் வழங்கவும் திட்டம். இதற்கான பிரீமியத்தில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்
-தபால் நிலையங்களை வங்கிகளாக மாற்ற நடவடிக்கை
-நாடு முழுவதும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் திட்டம் அமலாக்கப்படும்
-ஆண்டுக்கு ரூ. 12 செலுத்தினால் விபத்தில் பலியானவருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்
-முதியோருக்கு பென்சன் வழங்கவும் திட்டம். இதற்கான பிரீமியத்தில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்

-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications