பிப்ரவரி 29ம் தேதி... 2016-17ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2016-17ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 29ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா அறிவித்துள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க சென்ற ஜெயந்த் சின்ஹா நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் இத்தகவலையும் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இவ்வாண்டு லீப் வருடம் என்பதால் பிப்ரவரிக்கு 29 தேதி வருகிறது. அன்றைய தினம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

பட்ஜெட்டை தயாரிப்பதற்காக, தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சேவை மற்றும் வரிவிதிப்பு மசோதாவையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications