அமெரிக்க பாணியில் மாறுகிறது காக்கி சட்டை.. அனைத்து மாநில போலீசாருக்கும் ஒரே மாதிரி யூனிபார்ம்
டெல்லி: மாநிலங்களிடையே காவல்துறையினரின் யூனிபார்ம் டிசைன் மாறுபாடுடன் உள்ள நிலையில், நாடு முழுக்க ஒரே மாதிரியிலான சீருடையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் மொழி, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு பாகுபாடுகள் உள்ளன. வேற்றுமையிலும் ஒற்றுமையாக இருப்பதே இந்திய மக்களின் சிறப்பு இயல்பு.
மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு, வேற்றுமையை குறைத்து, பல்வேறு தன்மைகளை பொதுமைப்படுத்தும் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மூலம் தேச ஒற்றுமையை பலப்படுத்த முடியும் என்று மத்திய அரசு நினைக்கிறது.

பொதுமை ஒரு தொடர்கதை
ஹிந்தியை பொதுமைப்படுத்தி மக்களை இணைப்பது, இந்து மதத்தை முன்னிறுத்தி மக்களை இணைப்பது போன்ற செயல்களில் அரசு ஈடுபட தொடங்கியது. ஆனால், இணைப்புக்கு பதிலாக துவேஷம் அதிகரிக்க தொடங்கியதால் அவையெல்லாம் கிடப்பில் போடப்பட்டன.

யூனிபார்ம் ஆராய்ச்சி
இதேபோன்ற ஒரு பொதுமையை காவல்துறை விஷயத்திலும் கொண்டு வர உள்ளது மத்திய அரசு. மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் இது குறித்து ரூ.45 லட்சம் செலவில் ஆய்வு நடத்தப்பட்டது.

புது சீருடை
இந்த ஆய்வு முடிவுப்படி, நாடு முழுவதிலும் அனைத்து மாநில போலீசாருக்கும் ஒரே மாதிரியான சீருடை அணிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேண்ட் வண்ணம், திக்கான பிரவுன் கலரிலும், சட்டை க்ரீம் கலரிலும் இருக்கும்படியாக இந்த யூனிபார்ம் தயாரிக்கப்பட உள்ளது. போலீசாரின் தொப்பியும் க்ரீம் கலரில் இருக்கும். சட்டையின் இரு புறங்களிலும் பேட்ஜ் இடம் பெற்று, அதில் "இந்தியன் போலீஸ்" என்று பொறிக்கப்பட்டிருக்கும்.

அமெரிக்க பாணி
அமெரிக்காவில் போலீசாருக்கு இதே போன்றுதான் சீருடை வழங்கப்படுகிறது. அந்த சீருடையிலிருந்து சில மாற்றங்கள் செய்து, மெருகேற்றி, இந்திய போலீசாருக்கு சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் கருத்து
இந்த புதிய சீருடை பற்றி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி கருத்து கேட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வடிவமைத்துள்ள பதிய சீருடையில் வேறு ஏதாவது மாற்றங்கள் செய்யலாமா என்றும் மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் ஒப்புதல் வழங்கிய பிறகே இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானை ஏமாற்றிய இந்திய மாலுமி.. ஹார்முஸ் ஜலசந்தியை தந்திரமாக கடந்து மும்பை வந்து சேர்ந்தது எப்படி? -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
இந்திய எல்பிஜி கப்பல்களை அனுமதித்த ஈரான்.. இந்தியாவின் பவர் இதுதாங்க! சைலண்ட் சம்பவம் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்.. ஈரான் அனுமதி.. ஜெய்சங்கர் தரமான சம்பவம் -
“இந்தியா எங்கள் நண்பன்”.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிக்கும் ஈரான்! ஸ்பெஷல் பவர்! -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கிட்ட வந்த ஆசாமி.. மாஜி முதல்வர் மீது துப்பாக்கி சூடு.. NSG செய்த செயலால் நூலிழையில் தப்பினார்!












Click it and Unblock the Notifications