ஷாக்கிங்.. நாடாளுமன்றத்தில் விவாதித்து காவிரி மேலாண்மை வாரியம்: சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது என்றும் காவிரி நடுவர்மன்றம் ஆலோசனைமட்டும் வழங்கலாம் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்துள்ளது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் வழக்கில் வாதாடிவிட்ட நிலையில், மத்திய அரசின் வழக்கறிஞர் இன்று வாதம் முன் வைத்தார்.
காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வழி வகை விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அப்போது கருத்து தெரிவித்தது. அதை செய்வோம் என்று மத்திய அரசு தெரிவித்தது.

அதிகாரம் இல்லையாம்
இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரமுள்ளது, காவிரி நடுவர்மன்றம் ஆலோசனைமட்டும் வழங்கலாம் என்று மத்தியஅரசு வழக்கறிஞர் வாதம் முன் வைத்தார்.

பேதங்கள் இல்லை
நதிநீர் பங்கீடு விவகாரங்களில் அனைத்து தரப்பிற்கும் சாதகமாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது, பேதங்கள் கிடையாது என்று மத்திய அரசு தனது வாதத்தின்போது தெரிவித்தது.

நாடாளுமன்றம் தலையிடும்
நதிகள் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது, மாநிலங்கள் சுயமாக நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவு என்பது நாடாளுமன்றத்தில் விவாதித்து செயல்படுத்தப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்றும், நாடாளுமன்றத்தில் வாதம் நடத்திய பிறகே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து முடிவு எடுக்க முடியும் என அரசு கூறியுள்ளது.

கர்நாடக ஆதரவு
மத்திய அரசின் நிலைப்பாடு தமிழகத்திற்கு எதிராகவும், கர்நாடகாவுக்கு ஆதரவாகும் உள்ளது என்று விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள். காவிரி நடுவர்மன்றம் என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு இணையான அதிகாரம் கொண்ட அமைப்பு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நடுவர்மன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை திருத்துவோம், விவாதிப்போம் என கூறுவது பெரும் தவறு என்று தமிழக விவசாய சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள்.
-
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications