மத்திய அரசு உத்தரவு- தமிழ்நாட்டில் இருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜம்மு காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டில் இருந்து பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கொடூர வெறியாட்டம் நடத்தியதில் 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNgov

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் அனைவரும் 48 மணிநேரத்தில் வெளியேற வேண்டும்; இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒருவாரத்தில் வெளியேற வேண்டும்; இரு நாடுகளிடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து; வாகா- அட்டாரி எல்லைகள் மூடல் என்பது உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவை அனைத்து மாநில அரசுகளும் முழு வீச்சில் செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டிலும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தானியர்கள் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இருந்து பாகிஸ்தானியர்கள் அனைவரும் நாளைக்குள் வெளியேற்றப்படுவர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+