புற்று நோய்க்கு மருந்தாகும் கஞ்சா... சட்டப்பூர்வமாக விற்க மேனகா காந்தி பரிந்துரை
புற்றுநோய்க்கு மருந்தாக கஞ்சா பயன்படுவதால், கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.
டெல்லி : மருத்துவ பயன்பாடுகளுக்கு கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி பரிந்துரை செய்துள்ளார்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேலாண்மை அமைச்சர் மேனகா காந்தி கஞ்சாவை மருத்துவ காரணங்களுக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு சட்ட முன்வரைவு ஒன்றை வெளியிட்டார்.

அதை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு சிறிய மாற்றங்களை செய்து மருத்துவ சிகிச்சைக்காக கஞ்சாவை மருந்து வடிவில் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியது. அமைச்சர்களின் இந்த ஒப்புதல் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மேனகா காந்தி, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கஞ்சா பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே வரிசையில் இந்தியாவிலும் கஞ்சாவை மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். குறிப்பாக புற்றுநோய் குணப்படுத்துவதில் கஞ்சா முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.
நாடு தழுவிய அளவில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ரயில் நிலையங்களுக்கு அருகில் வாழும் குழந்தைகள் அதிக அளவில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதியில் அதிக அளவில் போதை மீட்பு மையங்கள் அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications