சிறார் சட்டத்திருத்த மசோதா: ராம் ஜெத்மலானி, பிருந்தா காரத் எதிர்ப்பு
டெல்லி: சிறார் நீதி சட்டத்திருத்த மசோதா தேவையற்றது என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கருத்து தெரிவித்துள்ளார். 16 வயது சிறுவர்களை வயது வந்தவர்களாக நடத்துவது பிற்போக்குத் தனமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பிருந்தா காரத் கூறியுள்ளார்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கின் இளம் குற்றவாளி சனிக்கிழமையன்று விடுதலை செய்யப்பட்டுள்ளான். இந்த நிலையில், இளம் குற்றவாளிகள் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இம்மசோதா, ராஜ்யசபாவில் இன்னும் நிறைவேறாமல் உள்ளது.
இந்த சட்ட திருத்தத்தின்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள், கொடிய குற்றங்களில் ஈடுபடும்போது, அவர்களை வயது வந்தவர்களாக கருதி விசாரணை நடத்தலாம். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர், நாளையுடன் முடிவடைவதால், அதற்குள் இம்மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பு குறைப்பது தொடர்பான மசோதா குறித்து ராஜ்யசபாவில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவிற்கு ஆதரவு அளிக்கப்படும் என்று ஏற்கனவே கூறியுள்ளது. தன்னை சந்தித்த நிர்பயாவின் பெற்றோர்களிடமும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இதனை தெரிவித்தார். இதனால், சிறார் நீதி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
இந்நிலையில், இந்த மசோதா தேவையற்றது என்று பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், மசோதா நிறைவேற்றப்படுமா என்று எனக்கு தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இந்த மசோதா நிறைவேற்றப்படக் கூடாது. ஒரே ஒரு சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது. அதனால் சட்டத்திருத்த மசோதா தேவையற்றது. என்றார்.
அதேபோல இந்த சட்டத்தை ஆதரிக்கும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் வாதம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிருந்தா காரத் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றிர்க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 16 வயது சிறுவர்களையும் நீங்கள் கிரிமினல்களுடன் திகார் சிறைக்கு அனுப்ப போகிறீர்களா? என்ன ஒரு பிற்போக்குத்தனமான புரிதல். 16 வயது சிறுவர்களை வயது வந்தவர்களாக நடத்துவது முற்றிலும் தவறானது. நாங்கள் இதனை முற்றிலுமாக எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications