வகுப்புவாத சக்திகளுக்கு தக்க பதிலடி கொடுத்த உ.பி. மக்கள்: முதல்வர் அகிலேஷ் பெருமிதம்!
லக்னோ: உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் வகுப்புவாத சக்திகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 11 சட்டசபை தொகுதிகளுக்கும், மைன்புரி லோக்சபா தொகுதிக்கும் கடந்த 13ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. மைன்புரி தொகுதி சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ராஜினாமா செய்த தொகுதியாகும்.
அதேபோல இந்த மாநிலத்தில் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகிவிட்டதால் ராஜினாமா செய்த 11 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.

புறக்கணித்த பகுஜன்
இத்தேர்தலை பகுஜன் சமாஜ்கட்சி புறக்கணித்தது. இதனால் ஆளும் சமாஜ்வாடி மற்றும் பாஜக இடையே நேரடி மோதல் இருந்தது.

மைன்புரியில் சமாஜ்வாடி
இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மைன்புரி தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வெற்றிபெற்றது.

பாஜக தோல்வி
11 சட்டசபை தொகுதிகளில் 8 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது. 3 தொகுதிகளில் மட்டும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அகிலேஷ் கருத்து
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் வெற்றி குறித்து அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்கள் பிரிவினை மற்றும் வகுப்புவாத சக்திகளை தோற்கடித்துள்ளனர் என்றார்.

தக்க பதிலடி
மேலும் வகுப்புவாத சக்திகளுக்கு தக்க பதிலடியை மாநில மக்கள் கொடுத்துள்ளனர். அவர்கள் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் வேண்டும் என்ற எண்ணத்தை வெளிக்காட்டியிருக்கின்றனர். மதவாத சக்திகளை தோற்கடித்த மாநில மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

பொறுப்புடன் செயல்படுவோம்
அத்துடன் மதவாத சக்திகள் வெறுப்பு பரப்பி உயரத்திற்கு செல்ல முயற்சித்தன. ஆனால் மக்கள் தங்களுடைய வாக்கை கொண்டு மதவாத சக்திகளை தோற்கடித்துள்ளனர். உத்தரப்பிரதேச அரசு மட்டுமே வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துகிறது. தேர்தலை அடுத்தும் இந்த வழியில் சமாஜ்வாடி அரசு செயல்படும். பொறுப்புடன் செயல்படும் என்றும் அகிலேஷ் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications