அக்பர் வைத்த பெயரை மாற்றிய ஆதித்யநாத்.. அழகா இருந்த அலகாபாத்துக்கு புதுப்பெயர்!
உத்தர பிரதேசத்தில் இருக்கும் நகரமான அலகாபாத் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அலகாபாத்: உத்தர பிரதேசத்தில் இருக்கும் நகரமான அலகாபாத் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அலகாபாத் கங்கை நதி இணையும் இடம். சங்கம், திரிவேணி என்று பல பெயர்களால் இந்த நகரம் அழைக்கப்படுகிறது.
பல வருடமாக அலகாபாத் என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த இந்த நகரம் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மூலம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
[ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்யப்போவது வசுந்தரா ராஜே? கலங்கடிக்கும் கள நிலவரம்]

பெயர் சர்ச்சை
சில ஆவணங்களின் படி, இந்த நகரத்தின் பெயர் 1580 வரை பிரயாகா என்று இருந்துள்ளது. அதன்பின் அக்பர் ஆட்சியில் இதன் பெயர் இல்லகாபாத் (அலகாபாத்தை குறிக்கும் வகையில்) என்று மாற்றினார். அதன்பின் அவரது பேரன் ஷாஜகான் அதை அலகாபாத் என்று திருத்தினார். அதன்பின் பல ஆட்சி மாறினாலும் இதே பெயர்தான் கடைபிடிக்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ் ஆவணங்கள்
ஆனால் ஒரு பக்கம் ஆர்எஸ்எஸ் வைத்திருந்த சமஸ்கிருத ஆவணங்களில் எல்லாம் பிரயாகா என்ற பெயர் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்துத்துவா கொள்கை கொண்ட பலர், இந்த நகரத்தை பிரயாக்ராஜ் என்று அழைத்து வந்துள்ளனர். இதன் பெயரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இஸ்லாமிய மன்னர்களை மன்னர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. முக்கியமாக அக்பரை மன்னராக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் வைத்த பெயர்களை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பேட்டியளித்தார்.

மாற்றினார்கள்
அதன்படி தற்போது அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றியுள்ளார். இதற்கு அம்மாநில அமைச்சரவையும் ஒப்புக்கொண்டுள்ளது. இன்றில் இருந்து அதிகாரப்பூர்வ ஆவணங்களில் எல்லாம் பிரயாக்ராஜ் என்ற பெயரைத்தான் கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications