2 பேரை என்கவுண்டர் செய்ய போறோம்.. சேனல்களுக்கு சொல்லிவிட்டு செய்த உ.பி போலீஸ்.. கொடூரமான வீடியோ!
உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் ஒன்று போலீஸ் மூலம் எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டு மக்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
Recommended Video

லக்னோ: உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் ஒன்று போலீஸ் மூலம் எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டு பின் மக்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேச போலீஸ் என்கவுண்டர் செய்ய போவதை முன்பே சொல்லிவிட்டு, செய்தியாளர்களை அழைத்து என்கவுண்டர் செய்துள்ளது.
உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்தே அங்கு அதிக அளவில் என்கவுண்டர்கள் செய்யப்படுகிறது. தினமும் 7-8 பேர் அங்கு என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள்.
இப்படி கொலை செய்யப்படும் நபர்கள் எல்லாம் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பலர் அப்பாவிகள் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மனித உரிமைகள் ஆணையம் இதுவரை இந்த கொலைகளில் ஒரு சிறிய நடவடிக்கை கூட எடுத்ததில்லை.

போன் செய்து சொன்னார்கள்
உத்தர பிரதேசத்தில் அதிக முஸ்லிம் வசிக்கும், அதிக என்கவுண்டர் நடக்கும் அலிகார்க் பகுதியில் உள்ள மச்சோ கிராம போலீஸ், அங்கு இருந்த மக்களுக்கும், தேசிய ஊடகங்களுக்கும் அவசரமாக நேற்று ஒரு செய்தி அனுப்பி உள்ளது. அதில், நாங்கள் இரண்டு பேரை என்கவுண்டர் செய்ய போகிறோம் நேரில் பார்க்க விருப்பம் இருந்தால் வாருங்கள். வீடியோ, புகைப்படம் எடுக்க அனுமதி உண்டு என்று அழைத்து இருக்கிறார்கள்.

வந்து குவிந்த மக்கள்
இந்த செய்தி அந்த ஊர் மக்களுக்கு மட்டுமில்லாமல், தேசிய ஊடகங்கள் எல்லோருக்கும் தீயாக பரவியது. அடுத்த 30 நிமிடத்தில் மக்கள் வெள்ளம் அந்த என்கவுண்டர் நடக்கும் இடத்தில் வந்து குவிந்தது. அதேபோல் செய்தி சேனல்களும் வீடியோ எடுக்க தயாராகி வந்து நின்றது. உலகிலேயே நேரடி ஒளிபரப்பு செய்யப்பட போலீஸ் என்கவுண்டர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
|
சுட்டுக் கொன்றார்கள்
இந்த நிலையில் அங்கு இருந்த போலீஸ் குண்டு துளைக்காத உடைகளை அணிந்து கொண்டு தூரத்தில் இருந்த பாழடைந்த கட்டிடம் ஒன்றை பார்த்து சுட்டனர். 8 க்கும் அதிகமான போலீஸ் இப்படி சரமாரியாக் தாக்குதல் நடத்தினார்கள். இந்த நிலையில் துப்பாக்கி சூட்டின் இறுதியில் 2 முஸ்லீம்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். முஸ்தகீம், நவ்சாத் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

என்ன காரணம்
நேற்று மாலை வரை இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் இன்றுதான் இவர்கள் ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் 6 கொலைகள் செய்துள்ளதாக போலீஸ் தெரிவிக்கிறது. ஆனால் என்னென்ன கொலைகள், எப்போது இதெல்லாம் நடந்தது என்று யாரும் விளக்கம் அளிக்கவில்லை.

அவர்கள் என்ன காரணம் சொல்கிறார்கள்
இந்த என்கவுண்டரை ஏன் இப்படி சொல்லிவிட்டு நடத்த வேண்டும் என்றும் போலீஸ் விளக்கம் அளித்து இருக்கிறது.
இப்படி செய்தால்தான் சிலருக்கு பயம் வரும் என்று கூறியுள்ளனர். மேலும், போலீஸ் எவ்வளவு வெளிப்படையாக செயல்படுகிறது என்று அப்போதுதான் தெரியும் அதனால்தான் இப்படி செய்தோம் என்றுள்ளனர்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications