தேசிய கீதத்தை பாதியில் நிறுத்த உத்தரவிட்ட உ.பி. ஆளுநர் ராம்நாயக்.... வெடிக்கிறது புது சர்ச்சை
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்ற நிகழ்ச்சியின் போது தேசிய கீதத்தை ஆளுநர் ராம்நாயக் பாதியில் நிறுத்த உத்தரவிட்டது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் மாற்றங்களை செய்துள்ளார். இன்று புதியதாக 12 அமைச்சர்களை தமது அமைச்சரவையில் அவர் சேர்த்துக் கொண்டார். இந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

அமைச்சர்கள் பதவியேற்று முடித்த பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் ராம்நாயக் திடீரென கைகளை உயர்த்தி தேசிய கீதத்தை உடனே நிறுத்துமாறு சைகை காட்டினார்.
அதாவது வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி உறுதி மொழி ஏற்பதற்காக அவர் தேசிய கீதத்தை நிறுத்துமாறு கூற முயற்சித்தார். அதற்குள் தேசிய கீதம் இசைக்கப்பட்டு முடிவடைந்தும் விட்டது.
இது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. உ.பி ஆளுநர் ராம்நாயக்கின் செயல் நியாயப்படுத்த முடியாத ஒன்று; கண்டனத்துக்குரியது என காங்கிரஸ் சாடியுள்ளது.
ஆனால் உஷாராகிக் கொண்ட ஆளுநர் மாளிகையோ, ஏதோ ஒரு சிறு குழப்பத்தால் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது; தேசிய கீதத்தை அவமதிக்கும் அல்லது இடையூறு செய்யும் நோக்கம் எதுவுமே இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications